தி மால் செல்லும் சாலையில் அமைந்துள்ள ரயில்வே வாரிய கட்டிடம் தனித்துவமான கட்டுமானங்களில் ஒன்றாகும். இரும்பு மற்றும் எஃகினால் உருவாக்கப்பட்டு தீப்பிடித்தலை தடுக்கும் அமைப்பாக விளங்கும் இந்த கட்டிடம் மும்பையைச் சேர்ந்த வல்லுநர்களான ரிச்சர்ட்சன் மற்றும் க்ருதாஸ் ஆகியோரால் கட்டப்பட்டது.
1896-1897 ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த அழகிய கட்டிடமானது பல வருடங்களுக்கு மேலாக பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களாக செயல்பட்டுவருகிறது. இந்தக்கட்டிடத்தின் தற்போதைய பெயர், 1923 ல் ரயில்வே வாரிய அலுவலகமாக செயல்பட்டதன் மூலம் வந்தது.