சிப்சாகர் நகரத்தில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது கௌரிசாகர் நீர்தேக்கம். இங்கிருக்கும் கோவில் 200 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாகும். இங்கு துர்கா தேவிக்கு மூன்று கோவில்கள் உள்ளன.
துர்கா தேவியின் பல்வேறு அவதாரங்களை இந்த ஏரிக்கரையில் காண முடியும். இந்து சமயத்தின் சக்தா வழியைச் சார்ந்த ராணி பூலேஸ்வரி தேவி இந்தக் கோவிலைக் கட்டினார்.
இவர், சக்தி வழியை அசாம் மாநிலத்தின் சமயமாக நிறுவ எண்ணினார். இவ்வாறு துர்கையை வலுக்கட்டாயமாக வணங்க வற்புறுத்தியதால், மோமோரியா எதிர்ப்பு படை உருவானது.
150 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் நீர்தேக்கம் மற்றும் மூன்று கோவில்களும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணங்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.
அசாம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் துர்கா தேவியை வழிபட்டுச் செல்கின்றனர். சிப்சாகர் சுற்றுலா செல்பவர்கள் பார்க்க வேண்டிய முக்கிய இடம் கௌரிசாகர் நீர்தேக்கம்.



Click it and Unblock the Notifications