மனிஹரன், பவன் மலையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த பண்டைய சுரங்கப்பாதையைப் பற்றி மகாபாரதத்தில் ஒரு குறிப்பு உள்ளது.
இந்து மத நம்பிக்கைகளின் படி இந்த சுரங்கப் பாதை பகவான் கிருஷ்ணரால் பயன்படுத்தப் பட்டதாக நம்பப்படுகிறது. இந்த சுரங்கப் பாதைக்கு கீழே புனிதமான `டிரிபெனி' நதி பாய்ந்து ஓடுகிறது.
இந்த சுரங்கப்பாதைக்கு மிக அருகே பகவான் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
மேலும் இந்த கோவில் இணையத்தளங்களில் சில்சார் சுற்றுலாவில் கண்டிப்பாக காண வேண்டிய மிக முக்கியமான இடம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஹோலி மற்றும் சிவராத்திரி திருவிழா இந்த சுரங்கத்தின் அருகே மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அப்பொழுது ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த இடத்திற்கு வருகை புரிகின்றனர்.



Click it and Unblock the Notifications