சோனிபட், தலைநகர் டெல்லிக்கு மிக அருகில், சுமார் 46 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் கிழக்கு எல்லையை தொட்டுக்கொண்டு யமுனா நதி பாய்ந்து ஓடுகிறது. மகாபாரத காலத்தில் இந்த நகரம் ஸ்வர்னப்ரஸ்தா என பாண்டவ சகோதரர்களால் நிறுவப்பட்டது. மஹாபாரத்தில் பாண்டவர்களில் மூத்தவரான யுதிஸ்த்திரன் கெளவரவர்களிடம் சமாதானமாகப் போவதற்குரிய விலையாக துரியோதனிடமிருந்து இந்த இடத்தை கேட்டதாக குறிப்பு உள்ளது.
இந்த உண்மையை ஆதரிக்க எந்த விதமான வரலாற்று ஆதாரமும் இல்லை என்றாலும், புகழ்பெற்ற இலக்கணகர்த்தா பானினியின் அஸ்ஹ்தட்யையில் சோனிபட் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நகரத்தில் சுமார் 600 கி.மு. முந்தைய பண்டைய பொருட்களை நாம் இன்றும் கண்டுபிடிக்க முடியும். அத்தகைய இடங்கள் மற்றும் பொருட்களை நாம் இன்றும் சோனிபட்டில் காணலாம்.
சோனிபட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்
சோனிபட்டின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக க்வாஜா கிஸ்ர் கல்லறை திகழ்கிறது. இந்த கல்லறை இப்ராகிம் லோதி ஆட்சியின் போது வாழ்ந்தாக நம்பப்படும் தர்யா கானின் மகனான ஒரு துறவியின் நினைவாக எழுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கல்லறை கி.பி. 1522 மற்றும் 1525 ஆண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டது. மேலும் இந்தக் கல்லறை ஒரு உயர்ந்த மேடையின் மேல் அமைக்கபட்டுள்ளது.
இந்தக் கல்லறை சிவப்புக் கல் மற்றும் ஓடைக்கல் ஆகிய இரண்டையும் பயன்படுத்தி கட்டப்பட்ட ஒரு அரிய நினைவுக் சின்னமாகும். இந்தக் கல்லறை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவன பாதுகாப்பின் கீழ் உள்ளது.
சோனிபட் வானிலை
சோனிபட் அடிப்படையில் சூடான மற்றும் உலர்ந்த வானிலையைப் பெற்றுள்ளது.
சோனிபட்டை எவ்வாறு அடைவது?
சோனிபட் சாலைகள், ரயில் மற்றும் விமான மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications