ஸ்ரீரங்கப்பட்டணா கோட்டை சுற்றுலாப்பயணிகள் அவசியம் காணவேண்டிய ஒரு வரலாற்று சின்னமாகும். காவேரி ஆற்றின் நடுவே ஒரு தீவில் அமைந்துள்ள இந்த கோட்டை திப்பு சுல்தான் கோட்டை என்றும் அறியப்படுகிறது. இது இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலை பாணியை கொண்டுள்ளது.
இந்தக் கோட்டைக்குள் நுழைய நான்கு வாயில்கள் உள்ளன. இவை டெல்லி, பெங்களூர், மைசூர் மற்றும் நீர் வாசல், யானை வாசல் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இரட்டைச்சுவர் அரண் அமைப்பை இந்த கோட்டை கொண்டுள்ளது ஒரு விசேஷமான பாதுகாப்பு அம்சமாகும்.இந்த கோட்டையின் பிரதான அம்சம் கோட்டை வாயிலாகும். இங்கு இந்த கோட்டை ஸ்தாபிக்கப்பட்ட நாள் பெர்ஷியன் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டையில் சர் ராபர்ட் கேர் வரைந்த சில அழகான ஓவியங்களும் காணப்படுகின்றன.
இக்கோட்டையில் சதுர்விம்சதி எனப்படும் தூண்களும் உள்ளன. இதில் பயணிகள் விஷ்ணுவின் 24 அவதாரங்கள் பொறிக்கப்பட்டிருப்பதைப்பார்க்கலாம். கோட்டையின் அடித்தளத்தில் இருட்டறைகள் காணப்படுகின்றன.
இவை சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இதர சுற்றுலா அம்சங்களான ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில், மசூதி போன்றவை இந்த கோட்டை வளாகத்துக்குள்ளேயே அமைந்துள்ளன.