ஸ்ரீசைலம் நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மல்லேல தீர்த்தம் அருவிக்கு அதன் சமயச் சிறப்பு காரணமாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த அருவியில் நீராடினால் பாவங்கள் தீரும் என்று பக்தர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுவதால் இதன் நீர் புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தீராத சரும நோய்களையெல்லாம் குணமாக்கும் பண்பு இந்த அருவி நீருக்கு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
மல்லேல தீர்த்தம் அருவியை ஆழமான பள்ளத்தாக்கில் 250 படிகளை இறங்கி கடந்து அடைய வேண்டுமென்பதால் பயணிகள் கவனமாக இருப்பது முக்கியம். மேலும் இந்தப் படிகள் வழுக்கும் நிலையில் இருப்பதால் வேகமாக செல்வது ஆபத்தாக முடியலாம் முடியலாம்.
இந்த அருவி அடர் வனங்களுக்கு மத்தியில் அமைந்திருப்பதோடு, அருவிக்கு செல்லும் வழி கரடு முரடான சாலைகளை கொண்டிருந்தாலும் சுலபமாக அடையக் கூடியதே. எனினும் மழைக் காலங்களில் வாகனங்கள் மூலம் இந்த அருவியை அடைவது சற்று கடினம்.



Click it and Unblock the Notifications