செலா பாஸ் பாதையிலிருந்து தவாங் வரும் பாதையில் 20 கி.மீ தூரத்தில் இந்த ஜஸ்வந்த் கர் எனும் நினைவுச்சின்னம் அமைந்துள்ளது. ஜஸ்வந்த் சிங் எனும் மஹாவீர் சக்ரா விருது (வீர மரணமடைந்தபின் வழங்கப்பட்டது) பெற்ற வீரரின் நினைவாக இது அமைக்கப்பட்டிருக்கிறது.
1962ம் வருடம் நடைபெற்ற இந்தோ சினப்போரில் இவர் 72 மணி நேரம் தொடர்ந்து போரிட்டுள்ளார். ஜஸ்வந்த் கர் நினைவுச்சின்னம் அவரது வீரத்தை போற்றும்விதமாக அமைக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.