திருமணச்சேரி அருகே இருக்கும் ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. புராணத்தின்படி சிவபெருமானை மணந்துகொள்வதற்காக பார்வதி தேவி இங்கு மறுபிறப்பு மேற்கொண்டதாக நம்பப்படுகின்றது.
3.5 ஏக்கர்கள் நிலப்பரப்பில் கோவில் வளாகம் பெரிதாக அமைக்கப்பட்டு இருக்கின்றது. காலை 6 மணி முதல் மதிய 12 மணி வரை, பின்னர் மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கோவிலில் வழிபடலாம்.
வாழ்க்கை துணை கிடைக்காதவர்கள் அடிக்கடி வந்து போகும் ஒரு இடமாக இக்கோவில் திகழ்கின்றது. சிவபெருமான் நடராஜராக இருக்கும் ஒரு ஸ்தலமும், தக்ஷணாமூர்த்தி, பிரம்மா தேவன், சுவாமி லிங்கோத்பவார் மற்றும் துர்க்கா தேவி ஆகியோருக்கும் ஒவ்வொரு ஸ்தலங்களும் இருக்கின்றன.
வரதராஜ ஸ்வாமிகளின் துணைவியரான பூ தேவியும், ஸ்ரீ தேவியும் வரதராஜ ஸ்வாமிகளோடு இந்த சந்நிதியில் வழிபடப்படுகின்றார்கள். இக்கோவிலுக்கு திருவிழாக்காலங்களில் வருகை தருவது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
கார்த்திகை தீபம், நவராத்திரி, ருத்ர தரிசனம் மற்றும் திருக்கல்யாணம் ஆகியவை இக்கோவிலில் கொண்டாடப்படும் விசேஷித்த பண்டிகைகள் ஆகும்.



Click it and Unblock the Notifications