டோங்க் நகரத்தில் உள்ள ஜம்மா மஸ்ஜித் இந்தியாவிலுள்ள பெரிய மசூதிகளில் ஒன்றாக அறியப்படுகிறது. இது அற்புதமான முகலாய கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.
டோங்க் நகரத்தின் முதல் நவாப் ஆன ‘நவாப் ஆமீர் கான்’ இதனை 1246ம் ஆண்டில் கட்ட ஆரம்பித்துள்ளார். பின்னர் இது 1298ம் ஆண்டில் நவாப் வைசிர் உத் தௌலா’வின் ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
நான்கு பிரம்மாண்ட குமிழ் கோபுரங்களுடன் காட்சியளிக்கும் இந்த மசூதியை வெகு தூரத்திலிருந்தே பார்க்க முடியும். உட்புறத்தில் தங்கப்பூச்சு ஓவியங்களும் மீனாகரி பாணி அலங்கரிப்புகளும் இந்த மசூதியின் முக்கிய சிறப்பம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.