திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமமான தாண்டிக்குடி சொர்க்கத்தில் இருந்து தவறி மண்ணில் விழுந்த ஒரு துண்டு போல தான் காட்சியளிக்கிறது. பெரும்பாலும் "ஆதா கொடை" அல்லது அரை கொடைக்கானல் என்று குறிப்பிடப்படுகிறது. இதமான வானிலை, அழகிய இயற்கை காட்சிகள், வசீகரமான பள்ளத்தாக்குகள் என நம் மனதை மயக்கும் பண்புகளை கொண்ட இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் மலையேறுபவர்களின் சொர்க்கமாகவும் உள்ளது. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி, சுமார் 3500 வருடங்களுக்கு முன்பு இங்கு வாழ்ந்த கற்கால குள்ள மனிதர்களின் குடியிருப்புகளையும் நீங்கள் காணலாம்!
வசீகரமான அழகால் நம்மை வசியப்படுத்தும் தாண்டிக்குடி
இயற்கை அன்னை வண்ணமயமான ஓவியங்களை வரைந்திருக்கும் இடம் தாண்டிக்குடி, அழகான மலைகள் பல மறைக்கப்பட்ட கதைகளைச் சொல்கிறது. இது பெரிய மற்றும் கம்பீரமான மற்றும் பிரமிக்கவைக்ககூடிய வகையில் நம் மனதை மயக்குகிறது. உயரமான மலைகள், அடர்ந்த காடுகள் மற்றும் முடிவில்லாத காபி தோட்டங்களின் விரிவு ஆகியவை தாண்டிக்குடியை அதன் அனைத்து மகிமையிலும் நிறைவு செய்கின்றன.

தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கால குடியிருப்பு
கீழ்பழனி மலையில் உள்ள பெரிய கிராமங்களில் ஒன்றான தாண்டிக்குடி, முக்கிய வர்த்தக வழிகளால் நன்கு இணைக்கப்பட்ட கிராமம் என்பதால் தனிச்சிறப்பு வாய்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் தடயங்கள், இரும்புக் காலத்திற்கு முந்திய காலத்திலிருந்தே தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை தெளிவாக சான்றளித்துள்ளன. இரும்பு கால கட்ட சின்னங்கள் உலகம் முழுக்க கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும் கூட, தமிழகத்திலும் அவை உள்ளன என்று உங்களுக்கு தெரியுமா?
வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்த தாண்டிக்குடி
ஆய்வுகள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் மூலம் திரட்டப்பட்ட தரவு, பழனி மலைகளின் கலாச்சார செயல்முறைகளை வரைவதற்கு ஒரு யோசனை அளிக்கிறது, குறிப்பாக தாண்டிக்குடி, இது இடைக்காலத்தில் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்தது, இது வர்த்தக சங்க கல்வெட்டுகளால் சான்றளிக்கப்படுகிறது. இரும்புக் கால கட்டர்களின் கல் வேலை, கட்டுமான முறைகள், பொறியியல் திறன்கள் மற்றும் தொழில்நுட்ப முழுமை ஆகியவற்றில் கட்டடக்கலை சாதனைகள் பற்றிய யோசனையைப் பெற தற்போதைய ஆய்வு நடத்தப்பட்டது.

கற்கால குள்ள மனிதர்களின் குடியிருப்பு பகுதிகள்
வழக்கத்திற்கு மாறான மற்றும் மர்மமான, டால்மன் வட்டங்கள் (கற்கால குள்ள மனிதர்களின் வீடு) நீண்ட காலமாக சுற்றுலாப் பயணிகளுக்கும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் ஒரு அற்புதமான ஈர்ப்பாக இருந்து வருகிறது. சுமார் 3 அடி உயரமுள்ள டால்மன்கள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டன மற்றும் அவற்றைக் கட்டியவர்கள் பற்றி மக்கள் அடிக்கடி ஆச்சரியப்படுகிறார்கள். கொடைக்கானல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், 60 க்கும் மேற்பட்ட டால்மன் தளங்கள் உள்ளன, அவை அதன் பாரம்பரியத்தின் அறியப்படாத பகுதியாகும்.
4000 ஆண்டுகளுக்கு முந்தைய வீடுகள்
டால்மன்களை யார் கட்டினார்கள் என்பது யாருக்கும் தெரியாது. குரும்பாக்கள் (இப்போது இந்திய அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் என வகைப்படுத்தப்பட்ட ஒரு பழங்குடி சமூகம்) டால்மன் கட்டுபவர்களின் வழித்தோன்றல்கள் என்று பிரிட்டிஷ் கல்வியாளரான தர்ஸ்டன் ஒரு கோட்பாட்டைக் கொண்டிருந்தார். இருந்தாலும் இங்கே கண்டுபிடிக்கப்பட்ட டால்மன் தளங்கள், கிமு 1500 முதல் கிமு 500 வரையிலானவை என்று கூறப்படுகிறது. அதாவது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தில் வாழ்ந்த குள்ள மனிதர்களால் இவை எழுப்பட்டுள்ளன என்பது தெரிகிறது.

வரலாற்று சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும்
இந்தக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பது பழனி மலையின் இரும்புக் காலத்துக்கு முந்தைய வரலாற்றில் எஞ்சியிருப்பவற்றைப் பாதுகாப்பதில் முக்கியமான படியாக இருக்கும். எதிர்காலத்தில், இந்த தளங்கள் சுற்றுலாத் தலங்களாக மாறும், பழங்கால நாகரிகங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, ஒவ்வொரு ஆண்டும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே உள்ளூர் வரலாற்றில் ஆர்வத்தைத் தூண்டும்.
சரியான முயற்சியின் மூலம், கொடைக்கானலின் மற்றும் இந்தியாவின் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தின் அடையாளமாக அங்கீகரிக்கப்படும் ஒரு பொறுப்பான சுற்றுலா தளமாக இந்த தளத்தை மாற்ற முடியும்!
நீங்கள் இந்த கற்கால குள்ள மனிதர்களின் வீடுகளை ஆராய்ந்தது உண்டா?



Click it and Unblock the Notifications





