Search
  • Follow NativePlanet
Share
» »அமானுஷ்யங்கள் நிறைந்த அழகிய சுற்றுலாத்தளங்கள்

அமானுஷ்யங்கள் நிறைந்த அழகிய சுற்றுலாத்தளங்கள்

அமானுஷ்ய நிகழ்வுகளால் கைவிடப்பட்ட அழகிய சுற்றுலாத்தளங்கள் இவை!

புதியது: திருநள்ளாறுவில் மீண்டும் தடுமாறிய செயற்கைகோள்கள் - உண்மை என்ன தெரியுமா?

மனிதர்களாகிய நாம் ஒரு இடத்தின் அழகை ரசிப்பதுடன், அதைப் பற்றி விமர்சிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளோம்.

அதே ஒரு சுற்றுலாத்தளம் அமானுஷ்ய சக்திகள் நிறைந்திருந்தால், அதை ஒரு சாகச பயணமாகவே மாற்றிவிடுவார்கள் சிலர். ஆம் அமானுஷ்ய நிகழ்வுகளால் கைவிடப்பட்ட சில இடங்கள் சுற்றுலாவுக்காக பெயர் பெற்றுள்ளன.

அன்றாட நிகழ்வுகளைத் தாண்டி, நாம் அனைவரும் சில சந்தர்ப்பங்களில் சுவாரசியமான ஒன்றைத் தேடி செல்வோம். அப்படி சில சுவாரசியமான இடங்களில் அமானுஷ்யங்களை சந்திக்கலாமா?

எந்தெந்த இடங்களில் என்னென்ன அமானுஷ்யங்கள் தெரியுமா? வாங்க பார்க்கலாம்...!

அதிகம் படித்த கட்டுரைகள் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது....

பங்கார்க் ராஜஸ்தான்

பங்கார்க் ராஜஸ்தான்


காத்து கருப்பு சுத்திட்டு கெடக்கு இந்த பக்கம் போகாதனு பல படங்களில் காட்டப்படும் பாழடைந்த கோட்டைகளில் ஒன்றுதான் இந்த பங்கார்க் கோட்டை


Arindambasu2

பங்கார்க்

பங்கார்க்


சுற்றுலாத் தளமான இது வயது வித்தியாசம் பாராது அனைவருக்குள்ளும் புத்துணர்வையும், சாகச உணர்வையும் ஊட்டும்..

எதுக்கும் ஓடுறதுக்கு வசதியா உடைகள் அணிஞ்சிட்டு போங்க..

பின்ன பேய நேர்ல பாக்கும்போது அலறி அடிச்சிட்டு ஓடவேண்டாமா?

Arindambasu2

தனுஷ்கோடி, தமிழ்நாடு

தனுஷ்கோடி, தமிழ்நாடு

பழம்பெரும் காவியமான ராமாயண புராணத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் ஊர் இதுவாகும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த இடம் புயல் காரணமாக இந்த நிலையை அடைந்தது.

இதுவும் மக்களால் கைவிடப்பட்ட இடமாகும்.

Nsmohan

தனுஷ்கோடி

தனுஷ்கோடி


அமானுஷ்யங்கள் நிறைந்ததாக கூறப்படும் இந்த கடற்கரைக்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

நீங்களும் ஒரு எட்டு போயி அந்த அமானுஷ்யம் என்னனு பாத்துட்டு வந்துடுங்களேன்.

Nsmohan

ரோஸ் தீவுகள், அந்தமான்

ரோஸ் தீவுகள், அந்தமான்


1941ம் ஆண்டு பிரிட்டிஸ் காலனி ஆதிக்கத்தின்போது அந்தமானில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு இந்த தீவு தனித்து விடப்பட்டது.

Aliven Sarkar

ரோஸ் தீவுகள்

ரோஸ் தீவுகள்

தற்போதைய நாள்களில் இந்த தீவு அனைவரையும் கவரும் சுற்றுலா பிரதேசமாக உள்ளது.

இன்னமும் சில மர்மங்கள் இந்த தீவில் ஒளிந்துள்ளதாக நம்பப்படுகிறது.

Sanyam Bahga

உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்

விஜயநகரம் , கர்நாடகம்

விஜயநகரம் , கர்நாடகம்

உலகின் பாரம்பரிய நகரங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த இடம் தற்போது யாரும் இல்லாமல் அநாதையாக காட்சியளிக்கிறது. காரணம் என்ன தெரியுமா?

Jonathandmello

அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா?

விஜயநகரம்

விஜயநகரம்

இந்த பழமையான நகரம் இங்கு ஆட்சி செய்த மன்னர்களின் கதைகளைத் தாங்கி நிற்கிறது. அதேதான் மர்மகதைகள்... விஜயநகர பேரரசின் தலைமையிடமாக இருந்த இந்நகரம் விசித்திரமான சம்பவங்கள் நிகழும் அமானுஷ்ய நகரமாகி போனது.

wiki

ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)

பெதாபூர் சிக்ரி, ஆக்ரா

பெதாபூர் சிக்ரி, ஆக்ரா

திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?

1585ம் ஆண்டிலேயே தனித்து விடப்பட்ட இடம் பெதாபூர் சிக்ரி. இது ஆக்ராவில் அமைந்துள்ளது. தாஜ்மஹாலுக்கு வரும் அளவுக்கு இங்கு பெரிதாக யாரும் வருவதில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள நீங்கள் ஆவலாக இருப்பீர்களே?

Binasengar

பெதாபூர் சிக்ரி

பெதாபூர் சிக்ரி


அக்பர் ஆட்சிப்பகுதியின் தலைநகராக இருந்த இவ்விடம் கட்டடக்கலைக்கும், சிறப்புகளுக்கும் புகழ் வாய்ந்தது.

அப்படி இருக்க ஏன் தனித்து விடப்பட்டது தெரியுமா?

ஆம்... அமானுஷ்யம்.... இந்த இடத்தில் அக்பரின் ஆவி உலாவுதாக நம்பப்படுகிறது.

வாங்களேன் சூடா அக்பர் ஆவிய பாத்துட்டு வரலாம்.

Sanyam Bahga

சிக்தன், லடாக்

சிக்தன், லடாக்

டிராகுலாக்கள் வசிக்கும் இடம் போன்று இருந்தாலும், இவை உண்மையில் அப்படி அல்ல... அதைவிட பயங்கரமான இடம்... இங்கேயும் சுற்றுலாவுக்காக அணிதிரள்கின்றனர் நம் மக்கள்... தெரியுமா?

Hamon jp

சிக்தன்

சிக்தன்

தனித்து விடப்பட்ட மலையில் தனித்தன்மையுடன் தனியாக அமைந்துள்ள இந்த இடம் எவ்வளவு பயங்கரமானது தெரியுமா?

பேய் ஓட்டுற இடத்துல பேய் ஓட்டுறவனுக்கு பேய் புடிச்சா அந்த பேய் ஓட்டுறவன் எந்த பேய் ஓட்டுறவன்கிட்ட போயி எப்படி பேய் ஓட்டுவான்.. மொக்கையா இருக்குல... சரி நீங்க சிக்தனுக்கே போய் பாத்துட்டு வாங்க...

babasteve

சாவின் கிராமம், ராஜஸ்தான்

சாவின் கிராமம், ராஜஸ்தான்

இப்படி ஒரு கிராமம். இந்த ஊரில் போயி ஒரு நாள் இரவு தங்கிட்டா அடுத்த நாள் அவன் பொணமாத்தான் வெளிய வருவானாம்.. ஆமாங்க... இந்த ஊருக்கு சாவு கிராமம்னு பேராம்...

அட சாவு கிராக்கி கேள்விப்பட்டிருக்கோம்,.... சாவு கிராமமா? ஊட்டான்ட சொன்னிட்டு வந்ட்டயா?


Archan dave

சாவின் கிராமம்

சாவின் கிராமம்

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் உலகின் மர்மமான கிராமங்களில் ஒன்று. 300 வருசத்துக்கு முன்னாடி திடீர்னு இந்த ஊர்ல உள்ள மக்கள்லாம் காணாம போய்ட்டாங்களாம்... அதுக்கப்றம் இந்த ஊருக்கு யாரு போனாலும் அவங்க திரும்பி வருவது இல்லையாம்.

தலைவெட்டியான் பட்டிக்கே வந்து வம்பிழுத்துட்டு உடம்புல தலயோட ஊர் போயி சேர்ந்துடுவியா நீ... நமக்கு உசுரதான முக்கியம்....


Suryansh Singh

https://en.wikipedia.org/wiki/Kuldhara#/media/File:Kuldhara_Village.jpg

மர்மங்கள் தொடரும்

மர்மங்கள் தொடரும்

இந்த மர்மங்கள்லாம் சும்மா ஜுஜுபி மேட்டர். இனி வரும் பாருங்க... அத அடுத்த பதிவுல பாக்கலாம்.... தொடர்ந்து இணைந்திருங்கள் நேட்டிவ் பிளானட் தமிழ்...

More News

Read more about: travel fort
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+