தமிழ் மக்களின் கலாச்சாரத்தில் ஊறிப்போனது தமிழ்நாட்டின் பெருமைக்குரிய திருவிழாவான ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்த்து விட வேண்டும் என்று நம்மில் பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் நமக்கு யாரையும் தெரியாது, எப்படி தங்குவது, எப்படி செல்வது என்ற குழப்பம் இருக்கும். நமக்காகவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க விரும்புவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னையிலிருந்து செல்லும் வகையில் 3 நாள் சுற்றுலாப் பயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது!
தமிழர்களின் வீர விளையாட்டு - ஜல்லிக்கட்டு
தமிழ்ச் செம்மொழி காலத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்த பாரம்பரிய விளையாட்டு கிமு 400 - கிமு 100 இல் தோன்றியது, மேலும் அந்த சகாப்தத்தில் வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் முல்லைப் பிரிவில் வாழ்ந்த மக்களால் ரசிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. காலப்போக்கில், திருவிழாவில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில், ஒரு பரிசுத் தொகை அறிமுகப்படுத்தப்பட்டு, கிரிட் காட்சிப்படுத்தியவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழர்கள் ஜல்லிக்கட்டை அதன் சிறந்த கலாச்சாரத்தின் கண்ணியத்தின் அடையாளமாக கருதுவதால், தமிழர்கள் வரலாற்றின் பக்கங்களில் பொறிக்கப்பட்ட இந்த திருவிழாவைக் காண உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

சென்னை-அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சுற்றுலா
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண ஆர்வமுள்ள நபர்களுக்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னையில் இருந்து 3 நாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளின் முக்கிய இடமான சென்னையில் இருந்து அலங்காநல்லூருக்கு 3 நாள் சிறப்பு ஜல்லிக்கட்டு சுற்றுப்பயணம் நடத்தப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஜனவரி 16-18 சுற்றுலா
இந்த சுற்றுலா ஜனவரி 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த உற்சாகப் பயணத்திற்கு முன்பதிவு செய்துள்ள பங்கேற்பாளர்கள் வரும் 16ஆம் தேதி சென்னையில் இருந்து பிரத்யேகப் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டு மதுரையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தங்க வைக்கப்படுவர்.

ஜாலியா ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களிக்கலாம்
17ம் தேதி காலை 9 மணிக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்தப் பயணத்துக்காக முன்பதிவு செய்தோருக்கு அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு வளாகத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகள் கேலரியில் முன்கூட்டியே டிக்கெட் பெற்று பாதுகாப்பாக அழைத்துச் சென்று 3 மணி நேரத்துக்கும் மேலாகப் போட்டியை கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி முடிந்து விடுதிக்கு திரும்பிய அவர்கள் பின்னர் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று மாலை தரிசனம் செய்வார்கள்.
பிரபல கோவில்களுக்கும் செல்லலாம்
18ம் தேதி காலை கள்ளகர் மற்றும் அழகர் சோலைமலை முருகன் கோவிலுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களித்ததோடு மட்டுமில்லாமல் மதுரையின் பிரபல கோவில்களுக்கும் ஒரு ட்ரிப் போயிட்டு வரலாம்.

இப்போதே டிக்கெட் புக் செய்யுங்கள்
அடுத்த ஆண்டு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை-அலங்காநல்லூர் சுற்றுப்பயணத்தில் சேர விரும்புவோர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 044-25333333, 25333444, 25333857, 25333850/854 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது ttdcsalescounter.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை பார்வையிடவும்!



Click it and Unblock the Notifications





