Search
  • Follow NativePlanet
Share
» »இந்த கோட்டை தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய கோட்டையாம் – அம்மாடி! எவ்வளவு பெருசா இருக்கு பாருங்களேன்!

இந்த கோட்டை தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய கோட்டையாம் – அம்மாடி! எவ்வளவு பெருசா இருக்கு பாருங்களேன்!

கோட்டைகளைப் பற்றி பேசினாலே முதலில் நினைவுக்கு வருவது ராஜஸ்தான் தான் என நாம் அனைவரும் அறிவோம். பல வரலாற்று பாரமபரியமிக்க கோட்டைகளுக்கு ராஜஸ்தான் மாநிலம் தாயகமாக உள்ளது. அதே போல இந்தியாவிலேயே மிகப்பெரிய கோட்டையும் ராஜஸ்தான் மாநிலத்தில் தான் உள்ளது. ராஜஸ்தானில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சித்தோர்கர் 65 வரலாற்றுத் தலங்களைக் கொண்டு 700 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் மிகப் பெரிய கோட்டையாக பெருமிதமாக நிற்கிறது. நாட்டின் வரலாற்றை ஆழமாக ஆராய விரும்பும் எவரும் சித்தோர்கரை பார்வையிடலாம். பல சிறப்புகள் வாய்ந்த சித்தோர்கர் கோட்டையைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே காண்போம்!

உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சித்தோர்கர்

உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சித்தோர்கர்

சித்தோர்கரின் புகழ்பெற்ற கோட்டை சித்தோர்கர் மற்றும் இந்தியாவின் பெருமை மட்டுமல்ல, 2013 இல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும் அறிவிக்கப்பட்டது. சித்தோர்கர் கோட்டை ஒரு அரிய ரத்தினமாகும், அதன் சிறந்த உள்கட்டமைப்பு உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. மலையின் மேல் அமைந்துள்ள இந்த கோட்டை 280 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ளது. சித்தூர் என்றும் அழைக்கப்படும் சித்தோர்கர், 7 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை ராஜபுத்திரர்களின் கீழ் மேவாரின் தலைநகராக இருந்தது. இது பல பழமையான கட்டிடங்கள், அரண்மனைகள் மற்றும் கோட்டைகளைக் கொண்டுள்ளது, அவை இந்த இடத்தின் அரச வரலாற்றைப் பெருமைப்படுத்துகின்றன.

700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோட்டை

700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோட்டை

மிகவும் பிரபலமான இந்த சித்தோர் கோட்டையை பாண்டவ சகோதரர்களில் ஒருவரான பீமன் கட்டியதாக கூறப்படுகிறது. 180 மீட்டர் உயரமுள்ள மலையில் நிற்கும் இந்தக் கோட்டை 700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதன் உள்ளே மீரா மற்றும் கும்ப ஷியாம் கோயில் உள்ளது. இது மீரா, கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மர்மக் கவிஞருடன் தொடர்புடையது, அவரது வாழ்க்கை மற்றும் பஜனைகள் இப்பகுதி மற்றும் இந்தியாவின் பல பகுதிகளின் நாட்டுப்புற மற்றும் இலக்கிய மரபுகளோடு தொடர்பு கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. சித்தோர்கர் கோட்டை ராஜபுத்திரர்களின் பெருமை, காதல் மற்றும் தைரியத்தின் மொத்த உருவகமாக இன்றளவும் பெருமையுடன் நிற்கிறது. இது வீரம் மற்றும் தியாகத்தின் வரலாறு என்பதை ராஜஸ்தானின் பார்ட்ஸ் பாடிய கதைகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த கோட்டையை வைத்து தான் பத்மாவதி படம் எடுக்கப்பட்டதோ

இந்த கோட்டையை வைத்து தான் பத்மாவதி படம் எடுக்கப்பட்டதோ

இந்த மாபெரும் கோட்டை பலதரப்பட்ட காலக்கட்டங்களில் பல்வேறு போர்களை சந்தித்துள்ளன. அவற்றில் அலாவுதீன் கில்ஜி மற்றும் அரசர் ரத்னசிம்ஹா இடையே நடந்த போர் இந்திய வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய போர்களில் ஒன்றாகும். மன்னரின் அழகு மனைவியான பத்மினியை அடையும் தீய நோக்கில் டெல்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜி கோட்டையைக் கைப்பற்றிய பின்னர் 30,000 இந்துக்களை படுகொலை செய்தார். கோட்டையில் இருந்த பெண்கள் அனைவரும் ஒன்றாக நெருப்பில் இறங்கி உயிர் தியாகம் செய்தனர். இந்த இடைவிடாத போரில் ராஜபுத்திர ஆண்களும் பெண்களும் செய்த மாபெரும் வீரம் மற்றும் தியாகத்தின் நினைவுகளை சித்தூர் கோட்டை தூண்டுகிறது.

ஒரு ஊரையே தனக்குள் வைத்திருக்கும் கோட்டை

ஒரு ஊரையே தனக்குள் வைத்திருக்கும் கோட்டை

கோட்டையில் அரண்மனைகள், கோயில்கள், புல்வெளிகள் மற்றும் ஏரிகள் உள்ளன, இவை அனைத்தும் ராஜஸ்தானில் பார்க்க சிறந்த வரலாற்று பயண இடங்களைத் தேடும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் ஆர்வத்தை தூண்டுகின்றன. கோட்டையில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் ராணா கும்ப அரண்மனை, ஃபதே பிரகாஷ் அரண்மனை, பத்மினி அரண்மனை, மீரா கோயில், காளி மாதா கோயில், கௌமுக் நீர்த்தேக்கம், பாஸ்ஸி வனவிலங்கு சரணாலயம், பத்மாவதி அரண்மனை, விஜய் ஸ்தம்பம், சதீஸ் தியோரி கோயில், கீர்த்தி ஸ்தம்பம், ஷ்யாமா கோயில், சன்வாரியாஜி கோயில், பல இந்து கோவில்கள் மற்றும் அற்புதமான அரண்மனைகள் ஆகியவை அடங்கும். ராணி பத்மினி மற்றும் கோட்டையில் உள்ள நீதிமன்றப் பெண்களின் வலிமிகுந்த தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜௌஹர் மேளா இங்கு விமர்சியாக கொண்டாடப்படுகிறது.

இத்தனை சிறப்பம்சங்கள் நிறைந்த கோட்டையை நீங்களும் பார்வையிடலாமே

இத்தனை சிறப்பம்சங்கள் நிறைந்த கோட்டையை நீங்களும் பார்வையிடலாமே

"பர்ட்ஸ் ஐ வியூ" வில் இருந்து பார்க்கும்போது சித்தோர்கர் கோட்டை மீனின் வடிவத்தில் தோன்றும். நாம் பல படங்களில் பாடல்களில் இந்த கோட்டையைக் கண்டு இருப்போம். ஆனால் அது தான் இந்த கோட்டை என்று நமக்கு தெரியாது. இப்படிப்பட்ட வரலாற்று நினைவுச் சின்னத்தை நாம் பார்வையிட வேண்டாமா? சித்தோர்கர் பல நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளதால் இங்கு விமானம், ரயில் அல்லது பேருந்து மூலமாக எளிதாக சென்றடையலாம். இதற்கான நுழைவுக் கட்டணம் வெறும் 1௦ ரூபாய் மட்டுமே!

Read more about: chittagorh fort rajasthan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X