திவ்ய தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும் சொல்லாகும். 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன.
உங்களால் எளிதில் நம்ப முடியாத மாய உலகம்...இவற்றை தெரியுமா?
ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். அவையே 108 திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளிலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை. இவற்றைத் தவிர மற்ற 106 தலங்களுக்கும் தம் வாழ்நாளில் சென்று அத்தலத்திற்குரிய பாடல்களைப் பாடுதல் ஒரு வைணவ சமய வழிபாடாக உள்ளது.
மோடி தேசத்தில் ஒரே மலையில் 1000 கோயில்கள் - எங்கே? எப்போ? எப்படி?
இந்த மாதம் அல்டிமேட் டாப் 5 கட்டுரைகள்:கீழே
ஸ்ரீரங்கம்
திருச்சிராபள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயிலில் பெருமாள் ரங்கநாதராக காட்சி தருகிறார்.
ரங்கநாயகி அம்மையாக உடன் இருக்கிறார்.
உலகிலேயே அதிக நேரம் இயங்கும் இந்து கோயில் என்ற பெருமையை கொண்டுள்ள ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நீங்கள் சென்றுவந்தால் நோய் பிணி தீர்ந்து நலமுடன் வாழலாம் என்கின்றனர்.
Ssriram mt
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் கோயில்
திருச்சிராபள்ளி மாவட்டத்திலேயே உறையூர் எனுமிடத்தில் அமைந்துள்ளது இந்த கோயில்.
அழகிய மணவாள பெருமாளாக காட்சிதரும் இறைவன் உடன் கமலவள்ளி வாசலட்சுமி அம்மையாக இருக்கிறார்.
இது நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
Ssriram mt
உத்தமர் கோயில்
திருச்சிராபள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள மற்றொரு பெருமாள் கோயில் இது. உத்தமர் கோயில் என்றழைக்கப்படும் இங்கு புருசோத்தம பெருமாள் பூர்ணவல்லியுடன் காட்சி தருகிறார்.
ஜனகபுரி மகராசா ஜனகர் கட்டியதாக கருதப்படும் இக்கோயில் புராணகதைகளில் அதிகம் பேசப்படுகிறது.
Nsmohan
பண்டரிநாதர் பெருமாள் கோயில்
திருச்சி மாவட்டம் உறையூர் அருகே அமைந்துள்ள மற்றொரு 108 திவ்ய தேச திருத்தலம் இதுவாகும்.
இங்கு இறைவன் பண்டரிநாதராக காட்சிதருகிறார். ரக்தபங்கஜவல்லி அம்மை உடன் இருக்கிறார்.
கிமு 800ல் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை கட்டியவன் பல்லவ மன்னன் தந்திவர்மன்.
Nsmohan
வடிவழகிய நம்பி பெருமாள் கோயில்
திருச்சி மாவட்டம் அன்பில் அருகிலுள்ள கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
சவுந்தரமூர்த்தி பெருமாள் , சவுந்தரவல்லியுடன் ஒரு சேர காட்சிதந்து அருளுகின்றனர்.
சோழன் சுந்தரன் இந்த கோயிலைக் கட்டியதாகவும், அவன் காலக்கட்டத்தில் நிறைய போர்கள் நடைபெற்று வென்று அதனால் செல்வ செழிப்புடன் வாழ்ந்ததாகவும் வரலாறு.
இந்த கோயிலுக்கு வந்து இறைவனின் அருள் பெற்றால் நீங்களும் செல்வசெழிப்புடன் வாழலாம்.
Nsmohan
அப்பக்கூடத்தான் பெருமாள் கோயில்
திருச்சி மாவட்டம் கோவிலடி அருகில் அமைந்துள்ளது அந்த அப்பக்கூடத்தான் பெருமாள் கோயில் .
இங்குஇந்திரவள்ளி அம்மையுடன் ஒய்யாரமாக காட்சி தருகிறார் அப்பள ரங்கநாத பெருமாள்.
ஆதித்ய சோழனின் அதிகாரத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த கோயில் கிமு 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.
Ssriram mt
ஹரன் சாப விமோட்சன பெருமாள் கோயில்
இந்த கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கண்டியூர் கிராமத்தில் உள்ள இந்த கோயில் வரலாற்று சிறப்புமிக்கது.
சிவனிடம் சாபவிமோட்சனம் பெற்ற கோயில் என்ற பொருளும் இதில் தொணிக்கிறது.
wiki
திருக்கூடலூர்
திருக்கூடலார் ஆடுதுறையை அடுத்துள்ள ஒரு புண்ணிய தலமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.
இங்கு பத்மசனி ஜகரத்சக பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
Ssriram mt -
திருக்கவிதலம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயில் 108 திவ்ய தேச தலங்களுள் ஒன்றாகும்.
இங்கு ராமாமணிவள்ளி கஜேந்திர பெருமாள் அருள் பாலிக்கின்றனர்.
Sundarstravels
நினைத்தவுடன் ஜூராசிக் பார்க்குக்கு போகலாம் எப்படி தெரியுமா?
இந்த பீச்சுக்கு போனா பேய் கூட வாக்கிங் போகலாமாம்? வாங்க போயித்தான் பாக்லாமே!
திகிலடையச் செய்யும் அமானுஷ்யத்தால் ஒதுக்கப்பட்ட சுற்றுலாத்தளங்கள்!! இங்கெல்லாம் போயிடாதீங்க!!
காலக்கெடு... இந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்துவிடும்!
இந்த எடத்துல அணைய போட்டா கர்நாடகா நம்மகிட்ட தண்ணிக்கு கெஞ்சும் இனி!
வற்றும்போது ஆற்றில் தென்படும் ஆயிரம் லிங்கங்கள்...ஊரார் மிரளும் மர்மங்கள்!