உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக நீண்ட வம்சங்களில் சோழர்களும் ஒன்று. இந்திய துணை கண்டத்துக்கு வெளியே பெரும் வணிக மற்றும் பிராந்திய லட்சியங்களைக் கொண்ட முதல் பேரரசு. சோழர்களின் பெருமையின் பேச்சு அரசியல் சாயமும் கொண்டது.
கலை மற்றும் கட்டடக்கலையில் சாதனைகளின் அளவு, எழுத்து மற்றும் கல்வெட்டு பதிவுகளின் எண்ணிக்கை அடிப்படையில், சோழர்கள் தென்னிந்திய வரலாற்றில் மிகப்பெரிய பேரரசுகளில் ஒன்றாக இடம்பெறுவர்.
வாழ்க்கை, பொருள் கலாசாரம் பற்றிய நுணுக்கமான விவரங்களை தரும் கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன. கி.பி., 1010 இல் முதலாம் ராஜராஜனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரகதீஸ்வரர் கோவிலில் மட்டும் கிட்டத்தட்ட நுாறு கல்வெட்டுகள் உள்ளன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படிப்பட்ட சோழர்கள் பெருமை பேசும் இடங்கள், இந்தியாவில் ஏராளமான உள்ளன. ஆனால், அவற்றில் இந்த 9 இடங்களை கட்டாயம் பார்க்க தவறாதீர்கள்.
பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர்
பெரிய கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளம். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சோழர் கட்டிடக்கலைக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு.
கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர்
முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோவில், சோழப் பேரரசின் பெருமையைக் பரவலாக பேசும். சிக்கலான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பிரம்மாண்டமான அமைப்பைக் கொண்டுள்ளது இந்த கோவில்.
ஐராவதேஸ்வரர் கோவில், கும்பகோணம்
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் என்று அழைக்கப்படும் மற்றொரு பகுதி. இந்த கோவில் உள்ள கல்சிற்பங்களுக்கு புகழ் பெற்றது. சிவபெருமானுக்கு என அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு கோவிலாகும்.
நாகேஸ்வரசுவாமி கோவில், கும்பகோணம்
தனித்துவமான அமைப்பைக் கொண்ட இந்த கோவில் சோழர் கோவில் கட்டிடக்கலையின் சிறந்த பிரதிநிதித்துவம் ஆகும். கோவிலில் உள்ள கல் சிற்பங்களில் விரிவான தகவல்கள் கொட்டி கிடக்கிறது.
கொரங்கநாதர் கோவில், சீனிவாசநல்லூர்
அதிகம் அறியப்படாத இந்தக் கோவில் அதன் நேர்த்தியான சிற்பங்கள் மற்றும் சோழர் கால கல்வெட்டுகளுக்காகவே தனித்து நிற்கிறது என்று சொன்னால் மிகையல்ல.
கைலாசநாதர் கோவில், திங்களூர்
சந்திரன் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் நவக்கிரக கோவில்களின் ஒரு பகுதியாகும். அதுமட்டுமின்றி, சோழர் வரலாற்றில் குறிப்பிடத்தக்கது என்பதே நிதர்சனமான உண்மை.
மூவர் கோயில், கொடும்பாளூர்
ஒரு சோழ நிலப்பிரபுத்துவத்தால் கட்டப்பட்ட இந்த வளாகத்தில் முதலில் மூன்று கோயில்கள் இருந்தன. தற்போது, இரண்டு மட்டுமே நிற்கின்றன. இது ஆரம்பகால சோழர் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் கோவில்களாகும்.
விஜயாலய சோழீஸ்வரம், காஞ்சிபுரம்
சோழ வம்சத்தை நிறுவியவரின் பெயரால் அழைக்கப்பட்ட இந்த கோவில், சோழர் கால கோவில் கட்டுமானத்திற்கு மேலும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
கம்பஹேஸ்வரர் கோவில், திருபுவனம்
சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில், சோழர் காலத்தின் கலை சாதனைகளை வெளிப்படுத்தும். அதுமட்டுமின்றி, அனைவரையும் ஈர்க்கக்கூடிய கோபுரம் மற்றும் சிக்கலான கல் வேலைகளுக்காக பெயர்பெற்றது.



Click it and Unblock the Notifications







