புலிகள் சரணாலயம், பறவைகள் சரணாலயம், யானைகள் சரணாலயம், பல வன உயிரினங்கள் அடங்கிய தேசியப் பூங்கா மற்றும் சரணாலயம் மாற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம், அவற்றில் பலவற்றிற்கு சென்றும் வந்திருப்போம்! ஆனால் இந்தியாவில் உள்ள சில கடல்சார் தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது.
பவளப்பாறைகள், சதுப்புநிலங்கள், கடல் ஆமைகள், பல அரிய தாவரங்கள் மற்றும் வளமான கடல்வாழ் உயிரினங்களைக் கொண்ட 6 கடல் தேசிய பூங்காக்கள் இந்தியாவில் உள்ளன. அந்த அழகிய பூங்காக்களில் ஒன்று தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. தெளிவான கடல் நீர், பவளப்பாறைகளில் ஸ்னோர்கெலிங், டால்பின்கள் ஸ்பாட்டிங், கடலோரங்களில் நடைபயணம், பல அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகளை காண இந்த அழகிய பூங்காக்கள் நமக்கு வாய்ப்பளிக்கின்றன. எந்தெந்த இடங்களில் கடல்சார் தேசியப் பூங்காக்கள் உள்ளன? எப்போது அங்கு செல்ல வேண்டும் என்று இங்கே பார்ப்போம்!

மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்கா, தமிழ்நாடு
தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையே ராமேஸ்வரத்தில் உள்ள பெரிய மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் உள்ளே 560 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த கடல் தேசிய பூங்கா அமைந்துள்ளது. தூத்துக்குடி மற்றும் தனுஷ்கோடி இடையே 160 கிமீ தூரம் வரை நீண்டுள்ள இந்த பூங்கா 21 சிறிய தீவுகள் மற்றும் அதை ஒட்டிய பவளப்பாறைகள் ஆகியவற்றால் ஆனது.
கடல் பல்லுயிரியலின் அடிப்படையில், மிகவும் வளமானதாக கறுதப்படும் இந்த பூங்காவில் உங்களை பிரமிக்கவைக்ககூடிய பல விஷயங்களை நீங்கள் பார்க்கலாம். கண்ணாடி படகில் சவாரி செய்து கடல் புல், பவளம், கடல் வெள்ளரி, ஆமைகள், முத்து சிப்பி, கடல் குதிரை, ஹெர்ரிங், பாராகுடா, நீல திமிங்கலங்கள், டுகோங் ஆகியவற்றை நீங்கள் இங்கே காணலாம்.

ராணி ஜான்சி கடல் தேசிய பூங்கா, அந்தமான் மற்றும் நிக்கோபார்
அந்தமான் நிக்கோபாரில் கிழக்கு ரிச்சியின் தீவுக்கூட்டத்தின் மூன்று தீவுகளில் இந்த அழகிய ராணி ஜான்சி கடல் தேசிய பூங்கா அமைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதியில் பல்வேறு வகையான பவளம், சதுப்புநிலங்கள், நிலப்பரப்பு ஈரமான காடுகள், முதலைகள் மற்றும் துகோங் ஆகியவற்றை நீங்கள் இங்கே கண்டு ரசிக்கலாம். அதோடு மட்டுமில்லாமல் அருகிலுள்ள அழகிய ஹென்றி லாரன்ஸ் மற்றும் ஜான் லாரன்ஸ் தீவுகள் மற்றும் அவுட்ராம் தீவையும் நீங்கள் பார்வையிடலாம்.

கஹிர்மாதா கடல் சரணாலயம், ஒரிசா
ஒடிசாவின் கஹிர்மாதா கடல் சரணாலயம் 4.5 லட்சத்திற்கும் அதிகமான ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்கு தாயகமாக இருக்கின்றது என்றே சொல்லலாம். கஹிர்மாதாவின் 1,435 சதுர கிலோமீட்டர் கடற்கரை ஒடிசா அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட கடல் பூங்காவாக 1997 இல் அறிவிக்கப்பட்டது. இந்த கடல் சரணாலயத்தில், ஆயிரக்கணக்கான ஆமைகள் பிறக்கும் செயல்முறையின் பல்வேறு கட்டங்களில் நீங்கள் காணலாம். தடிமனான சதுப்புநிலங்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நீர் உள்ளடக்கம் இந்த இடத்தை ஆமைகள் குஞ்சு பொரிக்க சிறந்த இடமாக மாற்றுகிறது.

கடல் தேசிய பூங்கா, குஜராத்
கட்ச் வளைகுடாவில் ஜாம்நகர் கடற்கரையில் 1980 களின் முற்பகுதியில் நிறுவப்பட்ட மரைன் நேஷனல் பார்க் இந்தியாவிலேயே முதன்முதல் கடல் தேசிய பூங்காவாகும். 42 தீவுகளின் தீவுக்கூட்டத்தில் 52 வகையான பவளப்பாறைகள், ஏழு வகையான சதுப்புநிலங்களும் உள்ளன.
இங்கே நீங்கள் வர்ணம் பூசப்பட்ட நாரை, டார்டர், கருப்பு-கழுத்து ஐபிஸ், டால்பின்கள், பச்சை கடல் ஆமைகள், கடல் சுறாக்கள், ஆக்டோபஸ்கள், பஃபர் மீன், ஜெல்லிமீன்கள் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம். லை குறைவாக இருக்கும் போது நீங்கள் ஸ்நோர்கெலிங்கிற்குச் சென்றால், ராட்சத கடல் அனிமோன் மற்றும் இறால் அதன் மடிப்புகளில் மறைந்திருப்பதைக் காணலாம்.

மால்வன் கடல் வனவிலங்கு சரணாலயம், மகாராஷ்டிரா
மஹாராஷ்டிராவின் மால்வன் கடல் வனவிலங்கு சரணாலயம், நீல நீரில் பாய்ந்து செல்லும் டால்பின்களைப் பார்க்க சரியான இடமாகும். இந்த கடல் பூங்காவில் கடற்பாசி, அனிமோன்கள், மொல்லஸ்க்கள், முத்து சிப்பிகள், பவளப்பாறைகள் மற்றும் பல்வேறு வகையான மீன்களும் உள்ளன. நீங்கள் ஸ்நோர்கெல்லிங் அல்லது டைவிங் சென்றால் கடலுக்கு அடியே இருக்கும் பல அதிசயங்களைப் பார்க்கலாம். பறவை ஆர்வலர்கள் டெர்ன், ப்ளோவர், நீர்ப்பறவை மற்றும் எக்ரேட்ஸ் ஆகியவற்றைக் காணலாம்.

மகாத்மா காந்தி கடல் தேசிய பூங்கா, அந்தமான் மற்றும் நிக்கோபார்
1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அந்தமான் & நிக்கோபாரின் மகாத்மா காந்தி கடல் தேசிய பூங்கா தனித்துவமான பவளப்பாறைகள் மற்றும் உள்ளூர் ஆமைகளின் எண்ணிக்கையை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கடல் பூங்காவில் அழகான மணல் கடற்கரைகள் மற்றும் வெப்பமண்டல தாவரங்கள் கொண்ட 15 பாறை தீவுகள் உள்ளன. சாகச ஆர்வலர்கள் இந்த இடத்தை ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெல்லிங் அல்லது கண்ணாடி-அடிப் படகில் எடுத்துச் செல்லலாம். கடல்வாழ் உயிரினங்களைத் தவிர, இந்த கடல்சார் தேசியப் பூங்காவில் அந்தமான் டீல் மற்றும் கிளி உள்ளிட்ட 270 க்கும் மேற்பட்ட அழகான பறவைகளையும் நீங்கள் கண்டு மகிழலாம்.
ஆண்டின் எல்லா நாட்களிலும் இந்த கடல் சார் பூங்காக்கள் திறந்து இருக்கின்றன. நீங்கள் உங்களுக்கு சௌகரியமான நேரத்தில் இங்கே செல்லுங்கள், முக்கியமாக உங்கள் வீட்டு குட்டீஸ்களுடன் செல்லுங்கள்!



Click it and Unblock the Notifications




