Search
  • Follow NativePlanet
Share
» »கேரளாவில் அசத்தல் – பல்வேறு நகரங்களில் தானியங்கி கட்டண அமைப்புகளுடன் கூடிய மின்சார பேருந்துகள் அறிமுகம்!

கேரளாவில் அசத்தல் – பல்வேறு நகரங்களில் தானியங்கி கட்டண அமைப்புகளுடன் கூடிய மின்சார பேருந்துகள் அறிமுகம்!

மின்சார வாகனங்களை இயக்குவது பெரும்பான்மையான மாசுபாடு காரணிகளை குறைக்க உதவுவதால், இந்தியா மின்சார வாகனங்களின் மீது ஆர்வம் காட்டி வருகிறது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 57,613 கோடி ரூபாய் மதிப்பில் PM மின்சார சேவா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அத்திட்டத்தின் கீழ் இப்போது கேரளாவில் உள்ள 10 நகரங்களில் 950 தானியங்கி டிக்கெட் அமைப்புகளுடன் கூடிய மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன!

மின்சார வாகனங்களில் ஆர்வம் காட்டும் இந்தியா

பெட்ரோல் மற்றும் டீசலினால் இயங்கும் பேருந்துகளால் அதிக சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. உலகம் வெப்பமயமாதல் தொடங்கி, காற்று மற்றும் வளிமண்டலம் மாசடைதல் வரை வாகனங்களுக்கு பங்கு உண்டு. சுற்றுச்சூழலை காத்து, பாதிப்புகளை குறைக்க இந்தியா அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அதன்பதி இந்தியாவின் 169 நகரங்களில் 10,000 மின்சார பேருந்துகளை வழங்க பொது-தனியார் கூட்டு (PPP) அணுகுமுறையைப் பயன்படுத்தவுள்ளது.

Kerala to get 900 plus electric buses

கேரளாவின் 10 நகரங்களில் 950 மின்சார பேருந்துகள்

ஏற்கனவே தமிழகத்தில் இத்திட்டம் செயலில் உள்ள நிலையில் இப்போது கேரளாவிலும் தொடங்கப்படவுள்ளது. எதிர்காலத்தில், கேரள வீதிகள் பசுமை எரிசக்தியால் இயங்கும் தானியங்கி கட்டண முறைகளைப் பயன்படுத்தும் மின்சார பேருந்துகளால் அலங்கரிக்கப்படும். விரைவில், கேரளாவில் உள்ள 10 நகரங்களுக்கு 950 மின்சார பேருந்துகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் தலா 150 பேருந்துகள்

பொதுவாக மின்சார பேருந்துகள் 12 மீட்டர் மற்றும் 9 மீட்டர் தாழ்தள மின்சார பேருந்துகள் என இரண்டு வகைகளாக பிரிக்கப்படும். ஆனால், கேரளா இரண்டு வகையான பேருந்துகளையும் பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஒன்பது மீட்டர் பேருந்தும் குறைந்தபட்சம் 160 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும், 12 மீட்டர் பேருந்து 180 கிலோமீட்டர் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மற்றும் கொச்சி ஆகிய இரு நகரங்களுக்கு தலா 150 பேருந்துகள் வழங்கப்படும்.

Kerala to get 900 plus electric buses1

மாசுபாடு குறைவதுடன் மாநில அரசுக்கு லாபம்

இத்திட்டத்தின் கீழ், பேருந்துகளுக்கு கூடுதலாக ஓட்டுநர்கள் வழங்கப்படும் மற்றும் எரிபொருள் செலவை அரசே ஏற்கும். சார்ஜிங் நிலையங்கள் நகரத்தின் மையத்தில் அமைக்கப்படும் என்றும், பயணித்த கிலோமீட்டர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், மாநிலம் தனது வருவாயில் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசுக்கு பங்கை செலுத்தி மற்ற அனைத்து செலவுகளையும் பூர்த்தி செய்த பிறகு, முடிக்கப்பட்ட தொகுப்பு மாநிலத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை லாபம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாசுபாடு குறைவதுடன் மாநில அரசுக்கு லாபம் கிடைப்பது கூடுதல் சிறப்பு தானே.

விரைவில் பணிகள் துவக்கம்

மத்திய அரசுடன் ஒத்துழைக்கவும், பேருந்துகளை ஒதுக்கும் பணியை விரைவுபடுத்தவும், மாநில தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு முன்மொழிந்துள்ள பல்வேறு முயற்சிகளை பரிசீலிக்க வரும் நாட்களில் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் ஒன்று கூடுவார்கள் என போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜு தெரிவித்துள்ளார்.

Kerala to get 900 plus electric buses2

ஏற்கனவே 60 மின்சார பேருந்துகள்

திருவனந்தபுரம் மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நீண்ட தூர பேருந்துகள் மற்றும் மின்சார பேருந்துகளின் மையப்படுத்தப்பட்ட இயக்கத்திற்காக கார்ப்பரேஷன் கீழ் உருவாக்கப்பட்ட புதிய சட்ட நிறுவனமான கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் (KSRTC) SWIFT, அதிகாரப்பூர்வமாக 60 புதிய மின்சார பேருந்துகளை ஏற்கனவே ஒப்படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூடிய விரைவில் நீங்கள் கேரளாவின் மின்சார பேருந்துகளில் பயணிக்கலாம்.

More News

Read more about: kerala
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+