ஒரு இயற்கை சுற்றுலாத் தலத்தின் உண்மையான அழகை ஆராய வேண்டுமென்றால் நீங்கள் குளிர்காலத்தில் தான் அங்கு பயணிக்க வேண்டும். குளிர் காலத்தில் மலைவாசஸ்தலத்திற்கு சுற்றுலா செல்வது சரியான யோசனையா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நீங்கள் இயற்கை அழகை அதன் உச்சத்தில் இருக்கும் போது ரசிக்கவும், தனிமையான ஒரு சுற்றுலா செல்லவும், ஹனிமூன் செல்வதற்கும் குளிர்காலம் தான் பெஸ்ட் சாய்ஸ் மக்களே! அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டினின் இந்த இடங்கள் குளிர்காலத்தில் அட்டகாசமாக இருக்கின்றன. அங்கு எல்லாம் வெப்பநிலை அதிகபட்சமாக 22°C ஐ தாண்டுவது இல்லை!
கொடைக்கானல்
பழனி மலையின் சரிவுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள கொடைக்கானல், தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான தேனிலவு மலைவாசஸ்தலமாகும். மூடுபனி மலை உச்சிகளும், மாய பள்ளத்தாக்குகளும், உருளும் மேய்ச்சல் நிலங்களும், பசுமையான சரிவுகளின் கம்பளமும் நிறைந்த நிலப்பரப்பை நீங்களே கற்பனை செய்து பாருங்கள், கொடைக்கானல் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியும். கொடைக்கானல் ஏரி, பில்லர் ராக்ஸ், கொக்கர் வாக், பெரிஜாம் ஏரி, பிரையன்ட் பூங்கா, சில்வர் கேஸ்கேட் ஃபால்ஸ், பைன் காடுகள், கரடி ஷோலா நீர்வீழ்ச்சி, குக்கல் குகைகள் ஆகியவை இங்கே நீங்கள் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
ஊட்டி
மலைகளின் ராணி என்று செல்லமாக அழைக்கப்படும் ஊட்டி தமிழ்நாடு என்ற அழகிய கன்னியின் கிரீடம் போன்றவள். 2240 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஊட்டி தமிழ்நாட்டின் குளிர்ச்சியான மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும். மலைச் சரிவுகளில் பயமுறுத்தும் வளைவுகள் வழியாகச் செல்லும் நீலகிரி மலை ரயில் ஊட்டியின் அழகிய நிலப்பரப்புகளைக் காண, ரோஜா தோட்டம், தொட்டபெட்டா சிகரம், பைகாரா ஏரி, தாவரவியல் பூங்கா, ஊட்டி ஏரி, தேயிலை அருங்காட்சியகம் மற்றும் மான் பூங்கா ஆகியவற்றை சுற்றிப் பார்க்க இது ஒரு அருமையான வாய்ப்பாகும். நீங்கள் ஆண்டு முழுவதும் ஊட்டிக்கு செல்லலாம், ஆனால் அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் ஊட்டிக்கு செல்வது சிறந்தது. இரவில் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை குறைகிறது.
வால்பாறை
கோயமபுத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ள இந்த வால்பாறை அணைகள், தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், குன்றுகள், காடுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கி பார்வையாளர்களை தன்வசப்படுத்துகிறது. சோலையார் அணை, தேயிலை தோட்டம், காட்டு மரக் குடிசைகள், நீரார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, வெள்ளமலை சுரங்கப்பாதை ஆறு, பிரலா நீர்வீழ்ச்சி, சின்ன கல்லார் நீர்வீழ்ச்சி, பாலாஜி கோயில், இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா ஆகியவை நீங்கள் இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
கோத்தகிரி
தமிழ்நாட்டின் பழமையான மலை வாசஸ்தலங்களில் ஒன்றான கோத்தகிரி, அதன் அற்புதமான காட்சிகள், தேயிலை தோட்டங்கள், காபி தோட்டங்கள், மலையேற்றப் பாதைகள் மற்றும் பாறை ஏறுதல் ஆகியவற்றிற்கு பிரபலமானது. இங்கே நிலவும் இனிமையான வானிலை, அழகிய கிராமப்புறங்கள் மற்றும் வாழ்க்கையின் மெதுவான வேகம் ஆகியவை பிஸியான மற்றும் குழப்பமான நகர வாழ்க்கையிலிருந்து ஓய்வெடுக்க விரும்பும் மக்களை வெகுவாக ஈர்க்கின்றன. கேத்தரின் நீர்வீழ்ச்சி, ஜான் சல்லிவன் நினைவுச்சின்னம், லாங்வுட் ஷோலா காடுகள், கோடநாடு காட்சிப் புள்ளி, எல்க் நீர்வீழ்ச்சி மற்றும் ரங்கசாமி சிகரம் மற்றும் தூண்கள் ஆகியவை இந்த அற்புதமான மலைவாசஸ்தலத்தின் சிறப்பம்சங்களாகும்.
குன்னூர்
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உருளும் பசுமையான மலைகள், பள்ளத்தாக்குகள் மீது படர்ந்திருக்கும் மூடுபனிகள், வன உயிரினங்கள் நிறைந்த ஆழமான மாய காடுகள், விக்டோரியன் வசீகரம் கொண்ட காலனித்துவ கட்டிடங்கள் என அனைத்துக்கும் சொந்தமான இடம் தான் குன்னூர். கடல் மட்டத்திலிருந்து 1850 மீட்டர் உயரத்திலும், ஊட்டியில் இருந்து 17 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள குன்னூர், குளிர்காலத்தில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும். சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ், ஆட்டுக்குட்டி பாறை, வெலிங்டன், ட்ரூக் கோட்டை, ஹைஃபீல்ட் டீ எஸ்டேட், கேத்தரின் நீர்வீழ்ச்சி, லாஸ் நீர்வீழ்ச்சி, ரலியா அணை, லேடி கேனிங் ஆகியவை இங்கு நீங்கள் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
மேகமலை
தேனியில் இருந்து 55 கிமீ தொலைவிலும், கூடலூரில் இருந்து 59 கிமீ தொலைவிலும், குமளியில் இருந்து 92 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள மேகமலை தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய ஹில் ஸ்டேஷனாகும். 'ஹைவேவிஸ் மலைகள்' என்று பிரபலமாக அழைக்கப்படும் மேகமலை, மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு ஆராயப்படாத சொர்க்கமாகும். நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து அமைதியான ஒரு இடைவெளியை நீங்கள் தேடுகிறீர்களானால், மேகமலை உங்களுக்கு ஒரு சரியான தேர்வாகும்.
மசினகுடி
பசுமையான காடுகள், அழகான நீர்வீழ்ச்சிகள் மற்றும் அற்புதமான நிலப்பரப்புகளால் நிறைந்துள்ள மசினகுடி தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மற்றும் அழகான மலைவாசஸ்தலமாகும். விலங்குகளை கண்டறிவது, மீன் பிடிப்பது, ஜீப்புகளில் சஃபாரி, தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு செல்வது, மாயார் ஆற்றங்கரையிள் படகு சவாரி செய்வதுடன், முதுமலை மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தையும் கண்டு களிக்கலாம்.
ஏற்காடு
கிழக்குத் தொடர்ச்சி மலையில் செவராய் மலையில் அமைந்துள்ள ஏற்காடு தமிழ்நாட்டின் பிரபலமான புத்துணர்ச்சியூட்டும் மலைவாசஸ்தலமாகும். 1,623 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அழகிய மலைவாசஸ்தலம் ஆரஞ்சு தோப்புகள், பழங்கள் மற்றும் மசாலா தோட்டங்கள், ஓக் மற்றும் சந்தன காடுகள் மற்றும் காபி எஸ்டேட்டுகளுக்கு பெயர் பெற்றது. இங்கு, நீங்கள் தாவரவியல் பண்ணை, எமரால்டு ஏரி, பகோடா பாயின்ட், மான் பூங்கா, கரடி குகை, பட்டுப் பண்ணை, கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, டிப்பரரி வியூ பாயின்ட் மற்றும் ஷெவராய் கோயில் ஆகியவற்றைப் பார்வையிடலாம்.
கொல்லி மலை
'மௌண்டெய்ன் ஆஃப் டெத்' எனப்படும் மிரட்டலான பெயர் கொண்ட இந்த கொல்லி மலை தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கண்கவர் மலைவாசஸ்தலமாகும். இயற்கை அழகும் மத முக்கியத்துவமும் வாய்ந்த கொல்லி மலை தமிழ்நாட்டின் ஒரு ஆராயப்படாத இயற்கை அதிசயமாகும். புகழ்பெற்ற அரபளீஸ்வரர் கோயில், சித்தர் குகைகள், அகயா கங்கை நீர்வீழ்ச்சிகள், தாவரவியல் பூங்கா, மாசிலா நீர்வீழ்ச்சி, மற்றும் செல்லூர் வியூ பாயிண்ட் ஆகியவை இப்பகுதியின் பிரபலமான இடங்களாகும்.



Click it and Unblock the Notifications










