1260 கோடி பொருட்செலவில் 2,20,972 மீட்டர் சதுர பரப்பளவில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்ட சென்னை விமான நிலையத்தின் புதிய முனையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8 அன்று திறந்து வைத்தார். பல அதிநவீன வசதிகள் அடங்கிய இந்த முனையம் தமிழக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக கோலங்கள், கோயில்களின் வரைபடங்கள், பொம்மைகள், ஓவியங்களைக் கொண்டுள்ளது. ஆனால் ஜூன் மாத இறுதிக்குள் அனைத்து சர்வதேச விமானங்களும் அதற்கு மாற்றப்படுவதற்கு முன், இந்த புதிய முனையம் இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) தொடர்ச்சியான சோதனைகள் மற்றும் சில மாற்றங்களுக்கு உட்பட இருக்கிறது. அந்த மாற்றங்கள் என்னவென்று நாம் தெரிந்துக் கொள்ள வேண்டாமா?

ஜூன் மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் புதிய முனையம்
சென்னை விமான நிலையத்தில் உள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம், ஜூன் மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு ரம்மியமான விமான நிலையம் ஒரு பயணியை நல்ல மனநிலையிலும், அவர்களின் வரவிருக்கும் பயணத்திற்கு எளிதாகவும் வைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும் இவை அனைத்தையும் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தில் இருந்து எதிர்பார்க்கலாம். இருப்பினும், ஏர்லைன் ஆபரேட்டர்கள் குழு (AOC) உறுப்பினர்கள் பரிந்துரைத்தபடி சில சோதனைகள் மற்றும் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.

விமான ஆபரேட்டர்கள் குழு சமர்ப்பித்த 100 அம்ச பரிந்துரைகள்
சென்னை விமான நிலையத்தில் உள்ள புதிய தங்க முனையம் அதன் அழகிய கட்டிடக்கலைக்காக செய்திகளில் இடம்பிடித்துள்ளது. இருப்பினும், சர்வதேச விமானங்கள் இந்த முனையத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்பு, விமான ஆபரேட்டர்கள் குழு 100 அம்ச பரிந்துரைகளுடன் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. விமான ஆபரேட்டர்கள் பலரும் கலந்துரையாடி இந்த மாற்றங்களை சென்னையின் புதிய முனையத்தில் கொண்டு வர வேண்டும் என்று கூறினர்.

புதிய விமான முனையத்தில் வரக்கூடிய மாற்றங்கள்
இந்திய விமான நிலைய ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட 100 அம்ச பரிந்துரைகள் அறிக்கையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே
1. டெர்மினலின் புறப்படும் தளத்தில், கவுண்டர்கள் அமைந்துள்ள ஒவ்வொரு தீவிலும் நான்கு கூடுதல் செக் இன் கவுன்டர்களை விமான நிலைய அதிகாரிகள் சேர்க்க வேண்டும் என்று விமான நிறுவனங்கள் விரும்புகின்றன.
2. நுழைவு வாயில்களுக்கு அருகில் தரையில் பொருத்தப்பட்ட விமான தகவல் அமைப்பு விமான நிறுவனங்களின் மற்றொரு கோரிக்கையாகும்.
3. இரண்டு உள்நாட்டிலிருந்து சர்வதேச பரிமாற்ற மேசை கவுண்டர்கள் அமைக்கப்பட வேண்டும்.
4. புறப்படும் வாயில்களுக்கு கீழே செல்லும் படிக்கட்டுக்கு அருகில் உள்ள பக்கவாட்டு வழிகள் மெலிதாக இருப்பதால் அவற்றை மாற்ற அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்.
5. போதிய ஏரோபிரிட்ஜ் இல்லாதது, டெர்மினல் இன்னும் கட்டுமானத்தில் இருந்தபோதும் விமான நிறுவனங்கள் எழுப்பிய கவலை. அனைத்து விமானங்களையும் மாற்றுவதற்கு முன் ஐந்து ஏரோபிரிட்ஜ்கள் தயாராக இருக்க வேண்டும்.
6. போர்டிங் கேட்களுக்கு அருகில் பயணிகளுக்கு அதிக இருக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
7. இமிகிரேஷன் பகுதியில் இடவசதி இல்லை மற்றும் வரிசையில் நிற்கும் பயணிகளுக்கு போதுமான இடத்தை உருவாக்க இமிகிரேஷன் கவுண்டர்களை குறைந்தது நான்கு முதல் ஆறு அடிக்கு மாற்ற வேண்டும்.
8. முன்னுரிமை கவுன்டர்களை நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
9. சுங்கத்துறை கை சாமான்களை ஸ்கேனிங் செய்யும் பகுதியில் இடவசதி இல்லை மற்றும் நெரிசலை உருவாக்கும் மற்றும் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.

ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் சோதனை ஓட்டம்
இந்தப் புதிய முனையத்தில் சோதனை விமானங்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி பறக்கவிடப்படும் என்று அறிக்கைகள் கூறுகின்றன. சோதனை ஓட்டம் செய்வது, இந்திய விமான நிலைய ஆணையம் சென்னையின் புதிய முனையத்தில் மேம்படுத்துவதற்குச் செய்ய வேண்டிய அனைத்து மாற்றங்களையும் நன்கு புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications





