Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை கடற்கரைகளில் ஆமை குஞ்சுகள் – மெதுமெதுவாக கடலுக்குள் செல்லும் அழகிய நிகழ்வு!

சென்னை கடற்கரைகளில் ஆமை குஞ்சுகள் – மெதுமெதுவாக கடலுக்குள் செல்லும் அழகிய நிகழ்வு!

ஒவ்வொரு வருடமும் சென்னையின் கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான ஆமைகள் முட்டைகளை இட்டு செல்வது வழக்கம். பருவம் முடியும் நிலையில் (மார்ச் - ஏப்ரல்) முட்டைகளிலிருந்து ஆமைக் குஞ்சுகள் வெளிவந்து கடலுக்குள் செல்லும். அந்த அழகிய சீசன் இப்போது துவங்கி விட்டது. அவைகளுக்கு எந்த தொந்தரவும் செய்யாமல் இயற்கையாக நடக்கும் இந்த அதிசய நிகழ்வை கண்டு ரசிக்க ஏராளமான பொதுமக்களும் தன்னார்வலர்களும் வருடா வருடம் சென்னையின் கடற்கரைகளில் கூடுவது உண்டு! இந்த அரிய நிகழ்வில் நீங்களும் கலந்துக் கொள்ள வேண்டாமா?

ஆலிவ் ரிட்லி ஆமைகள் குஞ்சு பொரிக்கும் சீசன்

கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல், சென்னை கடற்கரையில் புலிகாட்டில் இருந்து கோவளம் வரையிலான ஆமை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்கள் ஆண்டுதோறும் ஆலிவ் ரிட்லி ஆமைகள் கூடு கட்டுவது மந்தமாகத் தொடங்கியுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். ஆனால் பருவம் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் இருப்பதால், ஆமைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

oliveridelyseason

இந்த ஆண்டு தாமதமாக துவங்கிய சீசன்

பிப்ரவரியில் கூடு கட்டும் பருவம் உச்சமாக இருக்கும் போது, ஆங்காங்கே கூடு கட்டுவது பொதுவாக டிசம்பர் கடைசி வாரத்தில் இருந்து தொடங்கியது. இருப்பினும், வடகிழக்கு பருவமழை பெருகிய முறையில் ஒழுங்கற்றதாகி, கடல் வெப்பமடைவதால், கூடு கட்டும் காலம் தாமதமாக ஜனவரி இரண்டாவது வாரத்திற்கு தள்ளப்பட்டது.

சென்னை கடற்கரைகளுக்கு வருகை தரும் விருந்தாளிகள்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் ஏராளமான ஆமைகள் தமிழக கடற்கரை ஓரங்களில் முட்டைகளை இட்டு விட்டு கடலுக்குள் சென்று விடுகின்றன. அந்த நேரத்தில் இருந்து சரியாக இரண்டு முதல் மூன்று மாத இடைவெளியில் முட்டைகளில் இருந்து ஆமைக்குஞ்சுகள் வெளிவந்து கடலுக்குள் சென்று விடுகின்றன. சிறிய அழகான உருவத்தில் ஆயிரக்கணக்கான ஆமைக்குஞ்சுகள் கூட்டம் கூட்டமாக கடலுக்குள் அதிகாலை வேளையில் செல்வதைப் பார்க்க கண் கோடி வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.

அழகான இயற்கை நிகழ்வு

முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் வெயிலில் பட்டோ அல்லது வழி தெரியாமலோ அல்லது கூட்டத்தை கண்டோ சரிவர கடலுக்குள் செல்ல முடியாத சூழல் ஏற்படுக்கிறது. ஆனால் தமிழக வனத்துறை அதிகாரிகள் ஆமைகள் முட்டையிட்ட காலத்தில் இருந்து அவற்றை சரிவர கவனித்து வருவதோடு, வெளிவந்த ஆமைக்குஞ்சுகளை கடலில் விட்டு விடுகின்றனர்.

oliveridelyseason

மீட்டு மறுவாழ்வு அளிக்க முயற்சி

சரியாக கடலுக்குள் செல்ல முடியாத ஆமைகளை தமிழக வனத்துறை மீட்டு செல்லும். மீட்கப்பட்ட ஆமைகளின் மறுவாழ்வுக்கான மருத்துவ வசதிகளுடன், ஆமை பாதுகாப்பு மையத்தில் ஆமை குளம், ஆமை கொட்டகை போன்ற வசதிகள் இருக்கும். நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த ஆமைகள் இயற்கையான வாழ்விடத்திற்குத் திரும்புவதற்கு முன், இந்த மையம் தற்காலிக இல்லமாகச் செயல்படும். நவீன பார்வையாளர் வசதிகளுடன் கூடிய வளம் மற்றும் அறிவு மையம், ஆமை பாதுகாப்பு குறித்த கற்றல் மற்றும் விழிப்புணர்வுக்கான அதிநவீன மையமாக மாறும் என்று கூறப்படுகிறது.

இந்த அரிய நிகழ்வை தவற விடதீர்கள்

பிப்ரவரி மாத இறுதி முதல் ஏப்ரல் மாத முதல் வாரம் வரை நிகழும் இந்த அதிசய நிகழ்வை காண தன்னார்வலர்களும், பொது மக்களும் சென்னையின் திருவான்மியூர், நீலாங்கரை, கோல்டன் பீச் கடற்கரைகளுக்கு வருகை தருகின்றனர். வனவிலங்கு பிரியர்களே, ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்படுவதைக் காண தமிழக கடற்கரைகளுக்குச் செல்ல இதுவே சரியான நேரம். இயற்கை அன்னை வழங்கும் அற்புதங்களில் ஒரு பகுதியாக இருக்கும் இந்த முழுமையான மகிழ்ச்சியை நீங்களும் உணர நீங்களும் செல்லுங்கள்!

More News

Read more about: chennai travel guide
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+