மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சீசனில் சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு லட்சக்கணக்கில் உயர்ந்து வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், கேரள போலீசாரும் தேவசம் போர்டும் திணறி வருவதால் பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என்று அறிவித்து இருந்தது, ஆனால் அந்த முடிவை அடுத்து ஏராளமான கோரிக்கைகளும் போராட்டங்களும் வெடித்த நிலையில், டிக்கெட் முன்பதிவு செய்யாத பக்தர்களும் கூட சபரிமலையில் தரிசனம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது!
80,000 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு
முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சபரிமலைக்கு சீசன் நேரங்களில் வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஆன்லைன் புக்கிங் அவசியம் என முடிவு எடுக்கப்பட்டது. சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு யாத்திரை சீசனை முன்னிட்டு, இந்த முறை ஆன்லைன் முன்பதிவு மூலம் மட்டுமே பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 80,000 பக்தர்களை அனுமதிக்கும் வகையில் வசதிகள் செய்து தரப்படும் என்று அறிவித்து இருந்தது.
2011ம் ஆண்டு ஆன்லைன் முன்பதிவு அறிமுகப்படுத்திய அரசு
ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் பற்றிய தகவல்களை டிஜிட்டல் ஆவணமாக்கல் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். யாராவது காணாமல் போவது அல்லது விபத்துக்களை எதிர்கொள்வது போன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களின் போது, இந்த விவரங்கள் மக்களை அடையாளம் காண உதவும். சபரிமலையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மெய்நிகர் வரிசை முறை திருப்பதியின் அமைப்பால் ஈர்க்கப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு சபரிமலை ஆன்லைன் பதிவு நடைமுறையை தொடங்கியது.

ஸ்பாட் புக்கிங் வசதியை கேன்சல் செய்த கேரள அரசு
அதன்படி வரும் மண்டல காலத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். கடந்த ஆண்டு ‛ஸ்பாட்' புக்கிங் முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த முறை அதற்கு அனுமதியில்லை. முன்கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களே மட்டுமே அனுமதிக்க வேண்டும். மேலும் நாள்தோறும் 80,000 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அப்போது தான் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதிருப்தியில் உறைந்த பக்தர்கள்
ஆனால், இந்த முடிவை பக்தர்களும் பொதுமக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள், இதனால் அதிருப்தி அடைந்துள்ளனர். பல்வேறு மன்றங்கள் புதிய விதிமுறைகளை கடுமையாக எதிர்த்து வருகின்றன, அதே நேரத்தில் சில மன்றங்கள் முடிவுகளை திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை கோரி மறியல் செய்ய திட்டமிட்டுள்ளன. நாடு முழுவதிலுமிருந்து மலைக் கோயிலுக்கு வருகை தரும் அனைத்துப் பிரிவினரும் ஆன்லைன் முன்பதிவு வசதிகளை அணுக வேண்டிய அவசியமில்லை. இந்த புதிய தடையால், தொலைதூரத்தில் இருந்து இறங்கி வரும் பக்தர்களுக்கு தரிசனம் மறுக்கப்படும் சூழ்நிலையும் ஏற்படலாம் என்று பக்தர்கள் குமுறி வருகின்றனர்.
முன்பதிவு செய்யாவிட்டாலும் தரிசனம் செய்யலாம்
ஆனால், இப்போது ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலத்தில் சபரிமலைக்கு சுற்றுவட்டார பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் புனித கோவிலுக்கு செல்கின்றனர். 2024 ஆம் ஆண்டு உச்ச சீசனுக்கு முன்னதாக, ஆன்லைனில் பதிவு செய்யாமல் இங்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு கேரள அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. சமீபத்திய புதுப்பிப்புகளின்படி, ஆன்லைன் பதிவு செயல்முறையை முடிக்காவிட்டாலும் பக்தர்கள் சபரிமலைக்கு வசதியாக தரிசனம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications





