Search
  • Follow NativePlanet
Share
» »புதுக்கோட்டை மாவட்டத்தில் இவ்வளவு அழகான சுற்றுலாத் தலங்களா?

புதுக்கோட்டை மாவட்டத்தில் இவ்வளவு அழகான சுற்றுலாத் தலங்களா?

வரலாற்றுக்கு முந்தைய மனிதனின் குடியேற்றங்கள், பெருங்கற்கால கல்லறைகள் மற்றும் பாறைகளால் வெட்டப்பட்ட குகை நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றின் சான்றுகள் புதுக்கோட்டையின் அற்புதமான சுற்றுலாத் தலங்கள் ஆகும். கோவில்கள், குகை ஓவியங்கள், கோட்டைகள், அரண்மனைகளுடன் வளமான கலாச்சார பாரம்பரியத்தை கொண்டுள்ள புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாட்டில் அதிகம் பிரபலம் ஆகாத சுற்றுலாத்தலம் என்று தான் சொல்ல வேண்டும். நீங்கள் கேள்விப்படாத புதுக்கோட்டை மாவட்டத்தின் அழகிய சுற்றுலாத் தலங்கள் இதோ!

சித்தன்னவாசல்

சித்தன்னவாசல்

புதுக்கோட்டை பற்றி எதுவும் தெரியாத நபர்களும் கூட இந்த இடத்தைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். ஆம்! "சித்தன்னவாசலில் உள்ள சிற்பங்கள் மெய்க்குது.." இது போல பல பாடல்களிலும் பல படங்களிலும் நாம் சித்தன்னவாசல் என்ற பெயரை கேட்டு இருப்போம். சித்தன்னவாசலில் உள்ள இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணக் கோயில், சுவரின் இருபுறமும் மகாவீரர் சிலைகளுடன் அரிவர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

அரிவர் கோயிலின் உச்சவரம்பு மகேந்திரவர்ம பல்லவரின் காலத்தைச் சேர்ந்த ஓவியங்களால் மூடப்பட்டிருக்கும். அரச தம்பதிகளின் சுவரோவியங்கள் மற்றும் கடல் விலங்குகள் கொண்ட தாமரை தொட்டி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்த ஓவியங்கள் அவுரங்காபாத்தில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களின் வாரிசுகள் என்று கருதப்படுகிறது.

கட்டுபவ பள்ளிவாசல்

கட்டுபவ பள்ளிவாசல்

புதுக்கோட்டையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் திருமயம் - மதுரை சாலையில் இந்த பழங்கால பள்ளிவாசல் அமைந்துள்ளது. ஆற்காடு நவாப் கிபி 17 ஆம் நூற்றாண்டில் கட்டினார். இது பக்ருதின் அவுலியாவின் கட்டுபவ சமாதியின் இருப்பிடம் ஆகும். வருடாந்திர யுஆர்எஸ் கொண்டாட்டம் இந்த மையத்தில் நடைபெறும் ஒரு பிரபலமான திருவிழாவாகும். இந்தப்பகுதி முஸ்லிம்களும் இந்துக்களும் இந்த பள்ளிவாசலுக்கு வருகை தருகிறார்கள்.

குன்னந்தர்கோயில் குகைக் கோயில்

குன்னந்தர்கோயில் குகைக் கோயில்

பாறையில் வெட்டப்பட்ட கட்டிடக்கலைக்கு எடுத்துகாட்டாக நிற்கும் இந்த குன்னந்தர்கோயில் குகைக் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. முத்தரையர் மன்னர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படும் இந்தக் கோயில் பிற்கால பல்லவர் கலையின் ஒரு மாதிரியாகும். கோவிலில் சோழர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள் மற்றும் விஜயநகரப் பேரரசுகளின் பல கல்வெட்டுகள் உள்ளன. இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையானது (ASI) இந்த கட்டமைப்பை "பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்" பிரிவில் சேர்த்துள்ளது.

திருமயம் கோட்டை

திருமயம் கோட்டை

புதுக்கோட்டை-காரைக்குடி-நெடுஞ்சாலையில் திருமயம் என்ற ஊரில் 20 ஏக்கர் பரப்பளவில் இந்த கோட்டை அமைந்துள்ளது. 1687 ஆம் ஆண்டு ராம்நாட்டின் ராஜாவான விஜய ரகுநாத சேதுபதியால் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. இந்திய தொல்லியல் துறையானது 2012 ஆம் ஆண்டு கோட்டையை சுற்றி விரிவான சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டது. இந்திய தொல்லியல் துறையானது கோட்டையை கட்டணம் செலுத்தி பார்க்கக்கூடிய நினைவுச்சின்னமாக நிர்வகித்து வருகிறது.

விராலிமலை

விராலிமலை

சித்தன்னவாசல் போலவே பிரசித்திப் பெற்ற சுற்றுலா தலங்களில் புதுக்கோட்டையின் விராலிமலையும் ஒன்று. புதுக்கோட்டையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் திருச்சிராப்பள்ளி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. அழகிய மணவாளன் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலில் நாளடைவில் ஆதித்திய சோழன் திருப்பணிகள், நாயக்கர் மற்றும் மருங்காபுரி வம்சங்களால் சேர்க்கப்பட்ட பிரகாரம் மற்றும் மண்டபங்கள் ஆகியவை கோயில் அமைப்பில் சேர்ந்தன. இக்கோயிலில் குடி கொண்டிருக்கும் முருகப்பெருமான் வேண்டிய வரத்தை கொடுக்கிறார் என்பது ஐதீதம், நீங்கள் புதுக்கோட்டை செல்லும்போது நிச்சயம் இங்கு செல்ல தவறாதீர்கள்.

 பிரகாதாம்பாள் கோயில்

பிரகாதாம்பாள் கோயில்

பிரகாதாம்பாள் கோயில் புதுக்கோட்டையில் உள்ள முக்கியமான தலமாகும். அற்புதமான கட்டிடக்கலை பாணியைக் கொண்டிருந்தாலும், ஆண்டு முழுவதும் கூட்டம் குறைவாகவே இருக்கும். இது திராவிட மற்றும் சமண கட்டிடக்கலையின் கலவையால் கட்டிடக்கலை அதிசயமாக கருதப்படுகிறது. கோயிலில் இருக்கும் தெய்வங்கள் கோகர்ணேஸ்வரர் மற்றும் அவரது துணைவியார் பிரஹத்மாபால். பல்லவ வம்ச மன்னர் மகேந்திரவர்மா 1 இதை கட்டியதாக நம்பப்படுகிறது.

ஆவுடையார்கோயில்

ஆவுடையார்கோயில்

புதுக்கோட்டையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆவுடையார் கோவிலில் உள்ள ஆத்மநாத சாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலில் பெரிய அளவிலான சிலைகள் உள்ளன. ஆவுடையார் கோயிலின் உச்சவரம்பு செப்புத் தகடுகளால் ஆனது, இது சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலின் கூரையுடன் ஒப்பிடத்தக்கது. கோயிலின் கிரானைட் கூரை வேலைகள் குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அளிக்கப்பட்டது. திருவாவடுதுரை ஆதியேனம் இக்கோயிலின் தலைமை வகித்து வருகிறார்.

விராலிமலை சரணாலயம்

விராலிமலை சரணாலயம்

நாம் அதிகம் அறிந்திடாத விராலிமலை வனவிலங்கு சரணாலயம் பல அழகிய வனவிலங்குகளை கொண்டுள்ளது. எண்ணற்ற உயிரினங்களின் வாழ்விடமாக அறியப்படும் இந்த சரணாலயத்தில் மயில், மான்கள், மாடுகள், பல அரியவகை பறவைகள் ஆகியவற்றை நீங்கள் கண்டு களிக்கலாம். அனைத்திற்கும் மேல் இந்த இடம் முழுவதும் பசுமை மட்டுமே இருப்பதால் பார்ப்பதற்கு சற்று அமர்ந்து பொழுதை போக்குவதற்கும் ஏற்றது. இந்த சரணாலயம் புதுக்கோட்டையில் இருந்து 42 கிமீ தொலைவிலும், திருச்சியில் இருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது.

அவ்வூர் தேவாலயம்

அவ்வூர் தேவாலயம்

புதுக்கோட்டையிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த தேவாலயத்தை ஜான் வெனஷியஸ் பாசெட் என்பவர் கட்டினார். ரோமன் கத்தோலிக்க தேவாலயமான இது, அவ்வூர் என்ற கிராமப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு எட்டு நெடுவரிசைகளைக் கொண்டுள்ளது, மேலும் இது தரையில் இருந்து 56 அடிக்கு உயர்த்தப்பட்டு, 28 அடி உயரம், 38 அடி அகலம் மற்றும் 240 அடி நீளம் கொண்ட சிலுவை வடிவில் உள்ளது. பார்ப்பதற்கு பழங்கால கட்டிடக்கலையை பிரதிபலிக்கிறது.

நர்த்தமலை

நர்த்தமலை

இது புதுக்கோட்டையிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நர்த்தமலை முத்தரையர் மூலஸ்தானத்தின் அதிபதி. நார்தாமலையின் முக்கிய அம்சங்களில் பழமையான வட்ட வடிவ கற்கோயில், விஜயாலய சோளீஸ்வரம் குகைக்கோயில் மற்றும் கடம்பர் மலைக்கோயில் ஆகியவை அடங்கும். நார்த்மலை முத்து மாரியம்மன் கோவிலுக்கு தற்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் முல்லைப்பரி ஊர்வலம் மிகவும் பிரபலமானது.

மேற்கூறப்பட்ட யாவும் புதுக்கோட்டை மாவட்டத்தின் அழகிய சுற்றுலாத் தலங்கள் ஆகும்! இந்த இடங்களுக்கு நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்!

More News

Read more about: pudukkkottai tamil nadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+