மொத்தமாக பூமியில் இருப்பது ஏழு கண்டங்கள் என சான்றுகளும், ஆய்வுகளும், ஆராய்ச்சிகளும் நிரூபித்துள்ளன. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் "8வது கண்டம்" என்று குறிப்பிடப்படும் ஒரு விசித்திரமான நீரில் மூழ்கிய நிலப்பகுதியான ஜிலாண்டியாவின் மிகவும் துல்லியமான வரைபடத்தை வெளியிட்டுள்ளனர். நீண்ட காலமாக கடலுக்குள் மூழ்கி இருந்த ஜிலாண்டியாவின் நிலப்பகுதி தற்போது வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது!
புவியில் ஏழு அல்ல எட்டு கண்டங்கள்
பள்ளிக் குழந்தைகள், ஆய்வாளர்கள் அறிஞர்கள் வரை பொதுவாக உலகின் தரையை இந்த எளிய அலகுகளாக பிரிப்பதை ஏற்றுக்கொள்கிறார்கள், இதில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா ஆகியவை அடங்கும். ஆனால் உலகில் ஏழு கண்டங்கள் அல்ல, எட்டு கண்டங்கள் உள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

8ஆவது கண்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜிலாண்டியா
ஆனால் 2017 ஆம் ஆண்டு, இந்த ஏழு கண்டங்கள் என்ற முடிவு சற்றே கலங்க ஆரம்பித்தது. ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கில் நீண்ட காலமாக கடலுக்குள் புதைந்து கிடக்கும் நிலமான ஜிலாண்டியாவின் நிலபரப்பு வெளியே தெரிய ஆரம்பித்தது. ஆனால் 375 ஆண்டுகளாக கடலுக்குள் புதைந்த கிடந்த நிலம் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியே தெரிய ஆரம்பித்ததால், அதனை விஞ்ஞானிகள் 8 ஆவது கண்டமாக ஏற்றுக் கொண்டனர்.
ஒவ்வொரு பகுதியிலும் மாறும் கண்டம் பற்றிய கண்ணோட்டம்
உலகளாவிய கண்ணோட்டத்தில் பார்க்கும்போது கண்டங்கள் பற்றிய கருத்து சற்று மங்கலாகிவிடும். வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் துறைகள் ஒரு கண்டம் என்ன என்பதற்கு மாறுபட்ட விளக்கங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, இந்தியர்கள் ஏழு கண்டங்களை அங்கீகரிக்கிறார்கள், அதே நேரத்தில் ரஷ்யர்கள் ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைத்து ஆறுக்கு வாதிடுகின்றனர். அண்டார்டிகாவைத் தவிர்த்து, கண்டங்களை அடையாளப்படுத்தும் ஐந்து வண்ண வளையங்களுடன், ஒலிம்பிக்கிலும் கூட அவற்றின் தனித்துவமான கண்டங்கள் உள்ளன.
மைக்ரோ கான்டினென்ட்ஸ் உருவாக்கிய கண்டங்கள்
புவியியல் நிலைப்பாட்டில் இருந்து பார்க்கும்போது, கண்டங்கள் டெக்டோனிக் தகடுகளில் தங்கியிருக்கும் கண்ட மேலோட்டத்தின் பாரிய நிலப்பரப்புடன் இணைகின்றன. இருப்பினும், பூமியானது "மைக்ரோ கான்டினென்ட்ஸ்" எனப்படும் மேலோட்டத்தின் சிறிய பகுதிகளையும் கொண்டுள்ளது.
மெதுமெதுவாக உருவாகிய உலகம்
சுமார் 83 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஜிலாண்டியா/மேற்கு அண்டார்டிகா மற்றும் அண்டார்டிகா/ஆஸ்திரேலியா விரிசல் அடைந்து, டாஸ்மன் கடலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன்பின், ஏறத்தாழ 79 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரெட்டேசியஸ் காலத்தின் பிற்பகுதியில், ஜிலாண்டியாவும் மேற்கு அண்டார்டிகாவும் பிரிந்து, பசிபிக் பெருங்கடலை உருவாக்கியது.
6% நிலப்பகுதி மட்டுமே வெளியே தெரிந்தது
சுமார் 23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நுண்கண்டங்களில் ஒன்றான ஜிலாண்டியா, பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் மூழ்கியபோது, தற்போது நவீன நியூசிலாந்து மற்றும் அருகிலுள்ள சில தீவுகளில் தண்ணீருக்கு 6% மட்டுமே மேலே தெரிய ஆரம்பித்தன. குறிப்பிடத்தக்க வகையில், அடுத்த பெரிய நுண் கண்டத்தை விட ஆறு மடங்கு பெரியதாக இருந்தாலும், ஜிலாண்டியா இன்னும் அதே பெயரைப் பகிர்ந்து கொள்கிறது.
இந்தியாவை விட மிகப்பெரியது
தோராயமாக 4.9 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது, இது ஆஸ்திரேலியாவின் பாதி அளவு, கிரீன்லாந்தை விட இரண்டு மடங்கு பெரியது மற்றும் இந்திய துணைக்கண்டத்தை விட பெரியது. பல புவியியலாளர்கள் ஜீலாண்டியா முழு கண்ட நிலைக்கான அனைத்து அளவுகோல்களையும் சந்திக்கிறது என்று வாதிடுகிறார்கள்.
நீளும் ஜிலாண்டியா பற்றிய ஆராய்ச்சி
நீருக்கடியில் உள்ள இடம் காரணமாக ஜீலாண்டியா ஒப்பீட்டளவில் ஆராயப்படாமல் உள்ளது, அதன் வடிவம் மற்றும் அமைப்பு பற்றிய நிச்சயமற்ற தன்மைக்கு வழிவகுத்தது. இதை சரிசெய்ய, சர்வதேச புவியியலாளர்கள் மற்றும் நில அதிர்வு நிபுணர்கள் குழு, கடல் தளம் மற்றும் கடலோர தீவுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பாறை மற்றும் வண்டல் மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் ஜிலாண்டியாவின் தற்போதைய வரைபடங்களை மேம்படுத்தியுள்ளனர். இப்போது அவர்கள் வெளியிட்ட படத்தின் மூலம் ஜிலாண்டியா குறித்த ஆராய்ச்சி மீண்டும் உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications





