நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தற்போது வாரத்தில் 5 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மூன்று நாட்களாக இயக்கப்பட்ட இந்த சேவை, பயணிகளிடம் கிடைத்த பலத்த வரவேற்பை அடுத்து தற்போது ஐந்து நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது, அதன்படி வெள்ளிக்கிழமைகளிலும் இந்ந்த பயணிகள் கப்பல் சேவை இயக்கப்படும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன!

நாற்பது ஆண்டுகால நிறுத்தத்தை துவங்கி வைத்த பிரதமர் மோடி
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் படகு சேவை பிரதமர் நரேந்திர மோடியால் அக்டோபர் 14, 2023 அன்று அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கப்பட்டது. இது நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்வழி இணைப்பு மீண்டும் தொடங்கப்பட்டதைக் குறித்தது, 1980 களின் முற்பகுதியில் இலங்கை உள்நாட்டு மோதல் காரணமாக ஒரு சேவை ஆரம்பத்தில் நிறுத்தப்பட்டது. சுமார் 3.5 மணி நேரத்தில் சுமார் 110 கிமீ தூரத்தை கடக்கும் அதிவேக படகு சேவை, இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவுகள், சுற்றுலா மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு to இலங்கை பயணிகள் கப்பல் சேவை
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவை கடந்த வருடம் அக்டோபர் 10 ஆம் தேதி துவங்கியது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தையும் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறையையும் இணைக்கும் இந்த பயணிகள் கப்பல் சேவை மலிவான மற்றும் வசதியான ஒரு பயணத்தை வழங்கி வருகிறது என அனைவரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது பயணிகள் படகுச் சேவையின் நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன!

நாகப்பட்டினம் to காங்கேசன்துறை
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு படகுச் சேவையை ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் சில காலமாக மேற்கொள்ளப்பட்ட போதும் பல்வேறு காரணங்களால் அது நிறைவேறவில்லை. இதேபோல், புதுச்சேரி யூனியன் பிரதேசமான காரைக்கால் மற்றும் காங்கேசன்துறையில் இருந்து படகு சேவையை அறிமுகப்படுத்தும் யோசனையும் தோல்வியடைந்தது. இப்போது நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை துவங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
கப்பல் சேவையை வரவேற்கும் இரு நாட்டு பயணிகள்
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் ஏராளமான இந்திய குடிமக்கள் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து இலங்கைக்கும், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கும் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் படிப்பு, வேலை, வணிகம் மற்றும் சொந்த காரணங்களுக்காக பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பலை இயக்க இரு நாடுகளும் முடிவெடுத்த நிலையில் இதனை இரு நாட்டு பயணிகளும் வெகுவாக வரவேற்று வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே சமீபகாலமாக அதிக அளவிலான பயணிகள் பயணம் செய்து வருவதால் முழு கொள்ளளவில் கப்பல் இயங்கி வருகிறது.
சுற்றுலா பயணிகள் வரவேற்பு
இரு மார்க்கத்திலும் தினமும் கப்பல் சேவை இயக்கபப்ட்டு வந்தது. ஆரம்பத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு என வாரத்தில் 3 நாட்களாக கப்பல் சேவை இயக்கப்பட்டது. சிவகங்கை கப்பல் சேவை மக்களை கவர்ந்த நிலையில் கப்பல் சேவையானது முதலில் 4 நாட்களாக அதிகரித்தது. தற்போது 5 நாட்களாக அதிகரிகப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி , வரும் நவம்பர் 8-ம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் சேவை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மலிவான கட்டணத்தில் இலங்கைக்கு பயணம் செய்யலாம்
இந்தப் படகுச் சேவையானது, இந்தியா மற்றும் இலங்கையின் கடலோரப் பகுதிகளில் உள்ள மதச் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டூர் ஆபரேட்டர்கள் மற்றும் பட்ஜெட் உணர்வுள்ள பயணிகள் இந்த மலிவு விலை பயண முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை இரண்டு வகுப்புகளை வழங்குகிறது, பொது வகுப்பு இருக்கைகளின் விலை சுமார் ரூ.5,000 மற்றும் பிரீமியம் வகுப்பு ஒரு நபருக்கு ரூ.7,500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் 25 கிலோ எடை வரை பொருட்களை கொண்டு செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் புக் செய்வது எப்படி?
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையில் காங்கேசன்துறை இடையே படகுச் சேவைக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய, sailindsri.com இல் உள்ள IndSri படகு சேவைகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தலாம். தொலைபேசி முன்பதிவுகளை விரும்புவோர், இந்தியாவைச் சார்ந்த விசாரணைகளுக்கு +91 744 886 3535 அல்லது இலங்கையில் இருந்து அழைத்தால் +94 715356365 ஐ அழைப்பதன் மூலமும் முன்பதிவு செய்யலாம்.
சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்
தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இலங்கையை சுற்றிப் பார்க்க செல்வதற்கு இந்த கப்பல் வழி மிகவும் வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், இலங்கையிலிருந்து வரும் யாத்ரீகர்கள் நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, திருநள்ளாறு, தஞ்சாவூர் மற்றும் திருச்சி போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கு எளிதாகச் செல்ல முடியும். நீங்களும் அழகிய சுற்றுலாத் தலமான இலங்கையை சுற்றிப் பார்க்க விரும்பினால், இந்த மலிவு விலை பயணத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!



Click it and Unblock the Notifications






