Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை நேப்பியர் பாலத்தை பற்றி நாம் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள்!

சென்னை நேப்பியர் பாலத்தை பற்றி நாம் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள்!

சென்னை என்றாலே உடனே நம் நினைவுக்கு வரும் பல விஷயங்களில் சென்னை நேப்பியர் பாலமும் ஒன்று. இந்த பாலத்தை சென்னையின் அடையாளம் என்றே சொல்லலாம். பல முறை இந்த பாலத்தின் மீது நாம் வாகனங்களில் சென்று இருப்போம், இறங்கி நின்று போட்டோ எடுத்து இருப்போம், இன்ஸ்டாவில் போஸ்ட் செய்திருப்போம். ஆனால் சென்னை நேப்பியர் பாலத்தை பற்றி நமக்கு என்ன தெரியும்? எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது? யார் கட்டினார்கள் என்றெல்லாம் நமக்கு தெரியாது அல்லவா!

சென்னையின் முக்கிய அடையாளம்

சென்னையின் முக்கிய அடையாளம்

சென்னை நகரைப் பற்றி அறியாதர்வகள் கூட இந்த பாலத்தைப் பற்றி தெரிந்து வைத்திருப்பார்கள். சென்னையிலேயே மிகப் பழமையான பாலம் இந்த நேப்பியர் பாலம் தானாம். ஏறக்குறைய 150 ஆண்டுகள் பழமையான நேப்பியர் பாலம் நகரத்தின் மிகவும் புகைப்படக் கட்டமைப்புகளில் ஒன்றாக இன்றளவும் திகழ்கிறது. 1869 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த பிரான்சிஸ் நேப்பியரால் கட்டப்பட்டது. பிரான்சிஸ் நேப்பியர் பிரபுவின் நினைவாக இந்தப் பாலத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது.

அக்காலத்தில் பிரபலமாக பார்வையிடப்பட்ட பாலம்

அக்காலத்தில் பிரபலமாக பார்வையிடப்பட்ட பாலம்

ஆங்கிலேயர்களின் கட்டிடக்கலை திறமைக்கு சான்றாக நிற்கும் நேப்பியர் பாலம் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்காக கட்டப்பட்டது. அக்கால கட்டத்தில் சென்னையில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட முதல் நவீன பாலம் இதுவாகும். ஆயுதங்கள் சென்று வரும் பாதை என்பதால் இரும்புக் கட்டைகளால் பாலம் பலப்படுத்தப்பட்டது. அப்போதைய நேரத்தில் கும்பல் கும்பலாக இங்கு வந்து மக்கள் இந்த பாலத்தை பார்வையிட்டு சென்றனராம்.

வரலாற்று சிறப்பு மிக்க இரும்பு பாலம்

வரலாற்று சிறப்பு மிக்க இரும்பு பாலம்

1915 ஆம் ஆண்டில் பெரும் போரின் போது அது மீண்டும் பக்கங்களில் பெரிய இரும்பு கர்டர்களால் பலப்படுத்தப்பட்டது அதிலிருந்து 'இரும்புப் பாலம்' என்று அறியப்பட்டது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது பாலம் தண்ணீரில் மிதப்பது போல் தோன்றும். பாலத்தின் அடியில் சிறப்பு விளக்குகள் மூலம் இந்த விளைவு உருவாக்கப்பட்டது.

ஜோடி சேர்ந்த நேப்பியர் பாலம்

ஜோடி சேர்ந்த நேப்பியர் பாலம்

பாலத்தின் "போ ஸ்ட்ரிங் கர்டர்" வடிவமைப்பு வேலை 1939 இல் தொடங்கி 1943 இல் நிறைவடைந்தது. காலப்போக்கில் போக்குவரத்து அதிகமாகி கொண்டே இருந்ததால், இந்த வரலாற்றுப் பாலம் சேதமடைந்து விடக் கூடாது என்பதற்காக இதே போல புதிய பாலம் கட்டப்பட்டது. கட்டப்பட்ட இணை பாலம் 2000 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. இந்த ஜோடி பாலம் இன்றும் நேப்பியர் பாலம் என்று அழைக்கப்படுகிறது.

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள பாலம்

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள பாலம்

இது சென்னையின் மிகவும் அதிகாரப்பூர்வ பொறியியல் கட்டுமானங்களில் ஒன்றாகும், எனவே இது பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு, நேப்பியர் பாலம் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. அது அப்போதைய துணை முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சிட்னியை தளமாகக் கொண்ட நிறுவனம் LDP ஆல் இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. நேப்பியர் பாலம் நூற்று நாற்பத்தி ஒன்பது மீட்டர் நீளமும், ஆறு வில்லுப்பாதைகளும், இரண்டு மீட்டர் அகலமான பாதப் பாதைகளும் கொண்டது. பாலத்தின் விளக்குகள் பார்வையாளர்களின் கூடுதல் ஈர்க்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சென்னை மக்களால் விரும்பப்பட்ட பாலம்

சென்னை மக்களால் விரும்பப்பட்ட பாலம்

பாலத்தின் வளைவுகள், பாதசாரி நடைபாதைகள் மற்றும் சாலை மேற்பரப்பு, தனித்துவமான பல்புகளால் இது சென்னையின் அடையாளமாக தனித்து நிற்கிறது. இது இரவில் ஒரு அற்புதமான தோற்றத்தைக் கொண்டுள்ளது மற்றும் புகழ்பெற்ற பாலம் ஏரியில் மிதப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. பாலத்தை மூடியிருக்கும் வண்ணமயமான ஸ்வாத்கள் ஒரு அழகான காட்சி மற்றும் அதற்கு முப்பரிமாண தோற்றத்தை அளிக்கிறது.

செஸ் போர்டினால் உலக அளவில் ட்ரெண்ட் ஆன நேப்பியர்

செஸ் போர்டினால் உலக அளவில் ட்ரெண்ட் ஆன நேப்பியர்

இன்றளவும் இரவிலும் பகலிலும் வெவ்வேறு நேரங்களில் இது புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற, செஸ் ஒலிம்பியாட்டிற்காக இது செஸ் போர்டு வடிவத்தில் வண்ணம் தீட்டப்பட்டு உலக அளவில் ட்ரெண்ட் ஆனது பற்றி நாம் அனவைருமே அறிவோம். சென்னையின் முக்கிய அடையாளமாக திகழ்வதோடு மெரினா கடற்கரையை இணைப்பது, வட சென்னையுடன் தென் சென்னையை இணைப்பதால் அதிகப்படியான போக்குவரத்து கொண்ட பாலமாக திகழ்கிறது. இத்தனை சிறப்புகள் நிறைந்த பாலத்தில் அடுத்த முறை செல்லும் போது உங்களுக்கு இது நியாபகம் வரும் அல்லவா?

More News

Read more about: napier bridge chennai tamil nadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+