வாழ்வில் தினந்தோறும் ஏதேதோ சங்கடங்களை நாம் சந்தித்துக் கொண்டிருக்கலாம்! வேலைப்பளு, குடும்பத்தில் பிரச்சினை, தொழில், அல்லது மெஷின் போன்று சுழன்றுக் கொண்டிருக்கும் இந்த அன்றாட வாழ்வில் இருந்து சற்று ஓய்வெடுத்தால் நன்றாக இருக்குமென்று நினைக்கலாம். எந்த காரணமாக இருந்தாலும் ஆலய வழிபாடு செய்வது என்பது நமக்கு மன நிம்மதியை கொடுக்கும்.
கல்வி, அறிவு, ஞானம், புகழ், செல்வம், ஆயூள், ஆரோக்கியம் என அனைத்தையும் வாரி வழங்கும் சிவ பார்வதியின் மூத்தப் பிள்ளையான விநாயகருக்கு நம் நாடு முழுவதும் பல பிரசித்திப் பெற்ற தலங்கள் உள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு சென்று வாருங்கள், நிச்சயம் திருப்பம் வரும்!

ஸ்ரீ சித்திவிநாயக் கணபதி மந்திர், மும்பை
மும்பையில் அமைந்துள்ள இந்த சித்திவிநாயக் கணபதி மந்திர் இந்தியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற மற்றும் பிரபலமான விநாயகர் கோவிலாகும். 1801 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பழமையான கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விநாயகர் சதுர்த்தி அன்று இந்த கோவில் சார்பாக வைக்கப்படும் விநாயகர் சிலையும் நாடெங்கிலும் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை விட தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் பொருட்செலவில் வைக்கப்படுமாம். இந்தக் கோவிலுக்கு சென்று வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது மக்களிடையே நிலவும் நம்பிக்கையாகும்.

காணிபாக்கம் விநாயகர் கோவில், சித்தூர்
ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியில் இருந்து சுமார் 45 கிமீ தொலைவில் இந்த அழகிய கோவில் இந்தியாவின் சிறந்த பழமையான கணபதி கோவில்களில் ஒன்றாகும். நெற்றியில் வெள்ளை, மஞ்சள், சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட விநாயகப் பெருமானை வழிபடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காணிப்பாக்கம் விநாயகா கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். 11ஆம் நூற்றாண்டில் சோழ மன்னன் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட இக்கோவிலுக்கு சென்றால் பாவங்கள் நீங்கி, பிரச்சினைகள் தீர்ந்து நன்மை பயக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தக்துஷேத் ஹல்வாய் கணபதி கோவில், புனே
ஸ்ரீமந்த் தக்துஷேத் ஹல்வாய் கணபதி கோயில் மகாராஷ்டிராவில் ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலுக்குப் பிறகு இரண்டாவது மிகவும் பிரபலமான கோயிலாகும். இங்குள்ள பிரம்மாண்டமான 7.5 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட கணபதி சிலை விலைமதிப்பற்ற தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இனிப்புகளை விற்ற தக்துஷேத் காட்வே தனது மகனை தொற்றுநோயால் இழந்ததாக நம்பப்படுகிறது. குழந்தையை இழந்த சோகத்துடனும் சோகத்துடனும் இந்த விநாயகர் கோவிலை கட்டினார் என்று கூறப்படுகிறது.

மணக்குள விநாயகர் கோவில், பாண்டிச்சேரி
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரஞ்சு ஆட்சியின் கீழ் இந்த கோவில் கட்டப்பட்டது. இங்குள்ள விநாயகர் சிலை பல முறை கடலில் வீசப்பட்டதாக நம்பப்படுகிறது, ஆனால் அது ஒவ்வொரு நாளும் அதே இடத்தில் மீண்டும் தோன்றி, வழிபாட்டாளர்களிடையே பிரபலமானது. இன்றுவரை, இந்த சிலை பிரெஞ்சு காலனியின் மையத்தில் அதே இடத்தில் உள்ளது. புதுச்சேரியின் மணக்குளாரை தரிசிப்பவர்களுக்கு வேண்டும் என்கிற வரமெல்லாம் கிடைக்கும். (Top 10 ganesh temples in India 5)

தொட்டா கணபதி கோயில், பெங்களூரு
பெங்களூரு பசவனகுடியில் உள்ள காளை கோயில் சாலையில் புகழ்பெற்ற தொட்ட விநாயகர் கோயில் உள்ளது. தொட்டா கணபதி கோயில் சிலை 18 அடி உயரமும் 16 அடி அகலமும் கொண்டது. பெங்களூருவில் அதிக அளவு மக்கள் சென்று வரும் கோவில்களில் இதுவும் ஒன்று. தொட்டா கணபதியை மனமுருகி வேண்டினால் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாம்.

மோதி துங்ரி கணேஷ் கோயில், ஜெய்ப்பூர்
250 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மோதி துங்ரி கோவில் கோட்டைகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட இது ஜெய்ப்பூரில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றாகும். இங்குள்ள மூலவர் சிலை சிலை சுமார் 500 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. ஸ்காட்டிஷ் கட்டிடக்கலையை உங்களுக்கு நினைவூட்டும் வகையில் சுண்ணாம்பு மற்றும் பளிங்கினால் உருவாக்கப்பட்ட இக்கோவில் நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது.

மதுர் மகாகணபதி கோவில், கேரளா
10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த இந்தக் கோயில், கேரள மாநிலம் காசர்கோடில் மதுவாஹினி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கட்டிடக்கலை அழகு மற்றும் வரலாற்று அமைப்புக்கு பெயர் பெற்ற இந்த அழகிய மதுர் மகாகணபதி கோயில் கும்ப்ளாவின் மைபாடி ராஜாக்களால் கட்டப்பட்டது. இந்த கோவிலின் முதன்மைக் கடவுள் சிவன், இருப்பினும், விநாயகர் சிலையின் தனித்துவம், இந்த கோவிலை சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக்குகிறது. இதனாலையே இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர் என்று உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.

கணேஷ் டோக் கோயில், காங்டாக்
காங்டாக்கில் உள்ள காஞ்சன்ஜங்கா மலைகளின் கண்கவர் காட்சிகளைக் வழங்கக்கூடிய இந்த அழகிய கோயில் மலை உச்சியில் அமைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளும் யாத்ரீகர்களும் இங்கு ஆண்டு தோறும் வந்து கொண்டு இருக்கிறார்கள். பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் காஞ்சன்ஜங்கா மலைகளின் இயற்கை காட்சிகள் இந்த கோயிலில் இருந்து மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இந்தக் கோவிலுக்கு சென்று வந்தால் மனதில் உள்ள கெட்ட எண்ணம் நீங்கி தூய்மை பிறக்குமாம்.

ரன்தம்பூர் விநாயகர் கோயில், ராஜஸ்தான்
இந்தியாவின் மிகப் பழமையான விநாயகர் கோயில் என்று சொல்லப்படும் இந்த ரன்தம்பூர் விநாயகர் கோயிலில் கிருஷ்ணரும் அவரது மனைவி ருக்மணியும் தங்கள் திருமணத்தின் போது இங்கு ஆசி பெற்றதாக நம்பப்படுகிறது. அதனாலேயே இந்த கோவிலுக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான திருமண அழைப்பிதழ்கள் வந்து சேருகின்றன. திருமணம் ஆன புதுமண தம்பதிகளும், திருமணம் ஆக வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்தக் கோவிலுக்கு கட்டாயம் வருகை தர வேண்டும்.

கற்பக விநாயகர் கோவில், பிள்ளையார்பட்டி, தமிழ்நாடு
சுமார் 1600 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் தமிழ்நாட்டின் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இங்கு விநாயகப் பெருமான் ஆறடி உயர சிலையில் ஆடை, அபகரனங்கள், மாலைகளுடன் கம்பீரமாக காட்சி தருகிறார். தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் சிக்கலான வடிவமைப்பிற்காக அறியப்படும் இந்த கோவில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவிலாகும். சுயம்புவாக உருவான கற்பக விநாயகர் கருணையே உருவானவர், நீங்கள் மனமுருகி வேண்டினால் அனைத்தையும் கொடுத்து ஆசீர்வதிப்பார்!



Click it and Unblock the Notifications






