என்ன தான் நாம் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பல இடங்களுக்கு பயணம் செய்தாலும், சுற்றுலா சென்றாலும், உங்களுக்கும் உன் மனைவிக்குமான தூரம் குறையாதது போல உள்ளதா? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நீங்களும் உங்கள் வாழ்க்கைத்துணையும் சேர்ந்து ஒரு குட்டி ட்ரிப் செல்வது தான்! உங்கள் மனைவியுடன் பயணம் செய்வது என்பது ஆழ்ந்த செறிவூட்டும் அனுபவமாகவும், தொடர்பை வளர்க்கவும், உங்களுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் நீடித்த நினைவுகளை உருவாக்கவும் முடியும்.
அன்றாட வழக்கங்களிலிருந்து விலகி புதிய இடங்களை ஒன்றாக ஆராய்வது உற்சாகத்தைத் தருகிறது, ஓய்வெடுக்க வாய்ப்பளிக்கிறது மற்றும் தனிப்பட்ட வழிகளில் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதை ஆழமாக்குகிறது. அந்த வகையில் நீங்களும் உங்கள் மனைவியும் சேர்ந்து சுற்றிப் பார்க்க வேண்டிய டாப் 5 மலிவான சுற்றுலாத் தலங்களின் லிஸ்ட் இதோ!

கோவா
ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா. மலிவான சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் கோவா முதலிடம் இருக்கிறதா என்று யோசிக்கிறீர்களா! ஆம், கோவா நீங்கள் நினைப்பது போல காஸ்ட்லியான டெஸ்டினேஷன் கிடையாது.பட்ஜெட் பிரண்ட்லியாக நீங்கள் அழகாக திட்டமிடலாம். சென்னையில் இருந்து ரயிலில் கோவாவிற்கு செல்லலாம், 16 மணி நேரத்தில் கோவாவை அடைந்து விடலாம். முன்கூட்டியே OYO மூலம் ரூம் புக் செய்து கொள்ளுங்கள், ரூ. 1௦௦ இல்இருந்தே மலிவு விலை ரூம்கள் கிடைக்கின்றன. பாகா, கேண்டலிம், கேலேங்குட் போன்ற பல கடற்கரைகள், இரவு விருந்துகள், பார்ட்டிகள், நடன நிகழ்ச்சிகள், புகழ்பெற்ற துத்சாகர் நீர்வீழ்ச்சி, மசாலா தோட்டம், டிரெக்கிங், ஸ்கைடைவிங், ஸ்கூபாடைவிங் போன்ற சாகச விளையாட்டுகள், பண்டையக் கால தேவாலயங்கள், கோட்டைகள் என உங்கள் துணையுடன் நீங்கள் உலாவி மகிழலாம்.ஒரு நபருக்கு 4 முதல் 4 வரை நாட்களுக்கு உணவு, ஷாப்பிங், டிக்கெட் உட்பட ரூ. 15,000 செலவாகும்.

ஊட்டி
கோயம்புத்தூரில் அமைந்துள்ள மலைகளின் ராணியான ஊட்டி தமிழ்நாட்டின் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். தேயிலை தோட்டங்கள், அமைதியான நீர்வீழ்ச்சிகள், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகள் மற்றும் வசீகரமான காலனித்துவ கட்டிடக்கலை ஆகியவற்றால் நிறைந்திருக்கும் ஊட்டி தேனிலவு தம்பதிகளுக்கு ஒரு சரியான தேர்வாகும். கோயம்பத்தூரில் இருந்து ஊட்டிக்கு பேருந்துகள் வழக்கமான முறையில் இயக்கப்படுகின்றன. இருப்பினும், ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்வது மனதிற்கும் கண்களுக்கும் இனிமையாக இருக்கும்.
ஊட்டியில் மலிவான விலையில் நிறைய ரிசார்ட்டுகள் உள்ளன. நான்கு நாட்கள் தங்கியிருந்து இனிமையான வானிலையை அனுபவித்து மகிழ்ந்து நீங்கள் ட்ரிப்பை முடிக்கலாம். எமரால்டு ஏரி, ரோஸ் கார்டன், ஊட்டி ஏரி, தாவரவியல் பூங்கா, கல்ஹட்டி நீர்வீழ்ச்சிகள், காமராஜ் சாகர் அணை. முதுமலை தேசிய பூங்கா, ஸ்டோன் ஹவுஸ், பைக்காரா நீர்வீழ்ச்சிகள், தொட்டபெட்டா சிகரம், செயின்ட் ஸ்டீபன் தேவாலயம், தேயிலை தொழிற்சாலை மற்றும் தேயிலை அருங்காட்சியகம், ஸ்டோன் ஹவுஸ் இவை யாவும் ஊட்டியில் பார்க்க வேண்டிய இடங்களாகும். ஒரு நபருக்கு ரூ. 8,000 முதல் 10,000 வரை செலவாகிறது.
குடகு
கர்நாடக மாநிலத்தின் ரத்தினமாக, ஏழைகளின் ஸ்காட்லாந்து என்று செல்லப்பெயர் பெற்ற குடகு மிகவும் பிரபலமான மலைவாசஸ்தலமாகும்.இங்கே தேனிலவு தம்பதிகள் அதிக அளவு குவிகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. குடகிற்கு செல்ல சிறந்த வழி பெங்களூரில் இருந்து பேருந்தில் செல்வது தான். போகும் வழியெல்லாம் நீங்கள் இயற்கையே ரசித்துக்கொண்டே ஆனந்தமாக பிரயாணிக்கலாம். குடகில் ஹோம்ஸ்டே செய்வது மிகவும் விசேஷமாகும். ராஜா சீட், லோக்கல் ஷாப்பிங், தலை காவிரி, நீர்வீழ்ச்சிகள், மடாலயங்கள், பல்வேறு இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை ரசித்தப்படியே உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசி மகிழ்ந்து புரிந்துக் கொள்ளலாம். ஒரு நபருக்கு ரூ. 10,000 முதல் 12,000 வரை செலவாகிறது.

கொடைக்கானல்
வசீகரம் நிறைந்த மலைகளின் இளவரசியான கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலை சாரலில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 7200 அடி உயரத்தில் உள்ள இந்த மலை வாசஸ்தலத்தைப் நீங்கள் பார்வையிடும் போது, நீங்கள் கற்பனை செய்த ஒவ்வொரு துளியும் நிஜமாக இருப்பதைக் காணலாம். கொடைக்கானல் என்பது தினசரி நகர வாழ்க்கையின் கடுமையிலிருந்து ஓய்வு எடுக்க நீங்கள் செல்லக்கூடிய ஒரு இடமாகும், மேலும் இந்த மலைப்பகுதியில் நீங்கள் பைக்கிங் அல்லது ட்ரெக்கிங் பாதைகளில் செல்லும்போதோ அல்லது சுற்றியுள்ள பரந்த காடுகளின் வழியாக உலா செல்லும்போது இயற்கையோடு நீங்கள் இனைந்து இருப்பதை நிச்சயம் உணருவீர்கள்.
கொடைக்கானல் ஏரி, சில்வர் கேஸ்கேட் ஃபால்ஸ், பிரையன்ட் பார்க், டால்பின் நோஸ், கிரீன் வேலி வியூ, கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரி, தலையார் நீர்வீழ்ச்சி, பேரிஜாம் ஏரி, கேனோபி ஹில், பாம்பர் ஃபால்ஸ், கோக்கர்ஸ் வாக் ஆகியவை இங்கு நீங்கள் பார்க்க வேண்டிய இடங்களாகும். கொடைக்கானலில் பல பட்ஜெட் ஃபிரண்ட்லி ஹோட்டல்களும் ஹோம் ஸ்டேகளும் உள்ளன. உங்கள் வசதிற்கு ஏற்றார்போல் ஒன்றை தேர்ந்தேடுத்து தங்கி அழகாக பொழுதைப் போக்குங்கள். ஒரு நபருக்கு ரூ. 8,000 முதல் 10,000 வரை செலவாகிறது.

மூணார்
கேரளாவின் வசீகரமான மலை வாசஸ்தலம் மற்றும் தென்னிந்தியாவின் சிறந்த தேனிலவு இடங்களில் ஒன்றான மூணாரில் நீங்கள் 4 முதல் 5 நாட்கள் தங்கியிருந்து உங்கள் சுற்றுலாவை மறக்க முடியாத இனிமையான நினைவுகளை உருவாக்கலாம். தேயிலைத் தோட்டங்கள், மலைத்தொடர்கள், படகு சவாரிகள் ஆகியவற்றை சுற்றி பார்த்துவிட்டு ஆனைமுடி மலைகளின் வளைந்த சாலைகள் வழியாக காதலருடன் கை கோர்த்து உலா வாருங்கள். மூணாறுக்கு செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் வாயிலாகவும், அல்லது கொச்சினில் இருந்தும் செல்லலாம். நீங்கள் பஸ் அல்லது ரயிலை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். அங்கே வீடெடுத்து அல்லது OYO வில் ரூம் புக் செய்து தங்கிக் கொள்ளுங்கள். ஒரு நபருக்கு ரூ. 10,000 முதல் 12, 000 வரை செலவாகிறது.



Click it and Unblock the Notifications






