தமிழனின் சிறப்பு பற்றி எத்தனையோ ஆதாரங்கள் பூமி முழுவதும் சிதறி கிடக்கின்ற போது ஏன் நாம் இதைப் பற்றி பேசுகிறோம் என்பதற்கு ஒரு காரணம் உள்ளது.
மகாபாரதம் கற்பனையா கிருஷ்ணர் ஆட்சி செய்த நகரம் உண்மையில் இருக்கின்றதா
தமிழனின் ஆற்றல்களைப் பற்றி அறியவும், கிருஷ்ணர் உண்மையிலே ஆட்சி செய்தாரா என்பது பற்றியும், அந்த துவாரகை பற்றியும் முழுமையாக படிக்கலாம் வாங்க

கிருஷ்ணரின் சொர்க்கபூமி
கிருஷ்ணர் ஆட்சி செய்த இடமாக கருதப்படும் துவாரகை உண்மையான ஊரா அல்லது கற்பனை பெயரா என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. அதன் பின்னணியில் உள்ள உண்மையை அறிந்து கொள்வோம் வாருங்கள்

கடலுக்கடியில் பொக்கிஷம்
துவாரகை நகரம் கடலுக்கு அடியில் இருப்பதாக தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இயற்கை சீரழிவு
கிருஷ்ணர் வாழ்ந்த இடமாக கருதப்படும் துவாரகை ஒரு இயற்கைச் சீரழிவால் கடலுக்குள் சென்றுவிட்டதாக தெரிகிறது.

கண்டுபிடிக்கப்பட்டது
இந்த நகரம் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புராணக் கதைகளில் கூறப்பட்டுவந்த பல அடையாளங்களை ஒத்த இந்த நகரம்தான் கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகை என பலரால் நம்பப்படுகிறது.

70 ஆயிரம் கோட்டைகள்
துவாரகை நகரம் புராணகதைகளில் 70 ஆயிரம் மாளிகைகள், பல கோடி மதிப்புள்ள நகைகளால் நிறைந்திருந்த நகரம் என துவாரகை நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வளவு ஆழம் தெரியுமா
இப்போது கடலுக்கு அடியில் நூற்றிமுப்பத்து ஐந்த அடி கீழே அமந்துள்ளது இந்நகரம்.

கடலில் எப்படி மூழ்கியது தெரியுமா
மகாபாரத போர் நடந்து முடிந்து கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட ஆழிப்பேரலை துவாரகை நகரத்தை கடலுக்கு அடியில் கிடப்பில் போட்டவிட்டது.

மகாபாரதம் உண்மையா
இந்த தகவல்களின் அடிப்படையில் மகாபாரதம் கற்பனையல்ல என்று பலரால் நம்பப்படுகிறது.

மாயனுக்கும் தமிழனுக்கும் என்ன தொடர்பு?
கடலுக்கடியில் கிடைக்கப்பெற்ற இந்த மாளிகைகளின் வடிவங்களை ஒத்த பல மாளிகைகள் மாயன் வம்சத்தினர் வசம் இருந்தது தெரியவந்துள்ளது. இதிலிருந்து தமிழன் அந்த மாயன் இனத்தவருடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அது போல மாயன் என்ற சொல் இந்தியாவில் பயன்பட்டே வந்துள்ளது. அதிலும் உலகின் முதல் மொழியான தமிழில் மாயன் என்பது பொருள்தரும் வகையில் அமைந்துள்ளது.

மாயனும் தமிழர்களும் ஒரே இனமா?
மாயன் என்ற இனம் அழிந்ததற்கான சரியான காரணமும் இல்லை. அப்படி ஒரு ஆதாரமும் இல்லை. கிட்டத்தட்ட மாயன் இனமும், தமிழ் இனமும் ஒரே மாதிரியான வாழ்க்கையை கடைபிடித்தே வந்துள்ளனர் என்கிறது ஆய்வு.
அப்படியானால் மாயனும் தமிழ் இனமும் ஒன்றுதானா?
இல்லையெனில் மாயனுக்கும் தமிழனுக்கும் உள்ள தொடர்பு என்ன?
எல்லாம் மர்மமாகவே தொடர்கிறது.
- மதுரையை எரித்த பிறகு கண்ணகி எங்கே சென்றாள் என்று தெரியுமா ??
- இந்த மாநிலங்களை எளிமையா கடக்க இந்த வழிகள்ல போங்க!



Click it and Unblock the Notifications



