நம்ம ஊர் தெருக்களில் நாய்கள், பூனைகள் உலா வரும், நாம் கண்டு கொள்ளாமல் நாம் என்ன வேலை செய்கிறோமோ அதனை செய்வோம். ஆனால் இந்தியாவின் ஒரு கிராமத்தில் காட்டுக்கே ராஜாவான சிங்கங்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இந்த ஊரில் உள்ள மக்கள் அதனை சற்றும் கண்டு கொள்ளாமல் தங்கள் அன்றாட வேலைகளை பார்த்து வருகின்றனர். இந்த அதிசய கிராமம் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்!
சுதந்திரமாக ஊரை சுற்றும் சிங்கங்கள்
கிர் தேசிய பூங்காவிற்கும் ஜுனாகத் நகரத்திற்கும் இடையில் இடையக மண்டலத்தில் அமைந்துள்ள சசான் கிர் கிராமம், இந்தியாவின் மிகவும் தனித்துவமான கிராமங்களில் ஒன்றாகும். தேசிய பூங்காவிற்கு அருகாமையில் இருப்பதால், கிராமம் அடிக்கடி அசாதாரண விருந்தினர்களைப் பெறுகிறது - ஆம், சிங்கங்கள் மிகவும் சுதந்திரமாக இந்த கிராமத்தை சுற்றி வருகின்றன.

கண்டு கொள்ளாத கிராம மக்கள்
நமக்கு, இந்த விஷயம் நிச்சயமாக ஆச்சரியமாக இருக்கிறது, ஆனால் இந்த கிராமத்தில் வசிப்பவர்களுக்கு இது ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டது. அவர்கள் சிங்கங்களை கண்டு அச்சமடைவதோ அல்ல பதட்டப்பட்டு ஓடுவதோ இல்லை. மிகவும் சாதரணமாக அவர்களது வேலைகளை பார்த்து வருகின்றனர். சிங்கங்களும் கிராம மக்களை ஒன்றும் செய்வது வேலை, அவைகள் சுதந்திரமாக உலா வருகின்றன.
சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் சாசன் கிர்
சாசன் கிர் கிராமம் ஆசிய சிங்கத்தின் கடைசி வாழ்விடத்திற்கான நுழைவாயில் ஆகும். தேசிய பூங்காவில் 500 க்கும் மேற்பட்ட சிங்கங்கள் உள்ளன, இது இந்த அழிந்து வரும் உயிரினங்களின் முக்கிய பாதுகாப்பு பகுதியாகும். சசான் கிர் ஒரு தனித்துவமான மற்றும் முக்கியமான பாதுகாப்புப் பகுதியாக இருப்பதுடன், இது ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதிலும், இந்தியாவில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.

ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்
நீங்கள் கிர் தேசியப் பூங்காவிற்குச் சென்றால், சசான் கிர் கிராமத்தை உங்கள் பயணத் திட்டத்தில் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். உள்ளூர் மால்தார் சமூகம், அவர்களின் கலாச்சாரம் மற்றும் மிக முக்கியமாக, இந்த பெரிய பூனைகளுடன் அவர்கள் எவ்வாறு மிகவும் நெருக்கமாக வாழ்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். சாசன் கிர் சித்தி சமூகத்தின் தாயகமாகவும் உள்ளது. அவர்கள் முதன்மையாக தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் பாண்டு பழங்குடியினரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இந்தியாவில் உள்ள தனித்துவமான சமூகங்களில் ஒன்றாகும்.
பிரபலமான சுற்றுலா தலம் - ஜூனாகத்
ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இருப்பதால், ஜூனாகத் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெறுகிறது. 1400 சதுர கிமீ அகலம் கொண்ட கிர் தேசியப் பூங்கா ஜுனாகரிலிருந்து 59 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கிபி 319 இல் சந்திரகுப்தாவால் கட்டப்பட்ட உபர்கோட் கோட்டை, ஜுனாகத்தில் உள்ள மற்றொரு சுற்றுலாத் தளமாகும்.
இந்தக் கோட்டை வரலாற்றில் 16 முறை முற்றுகையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜூனாகத்தில் உள்ள தர்பார் ஹால் அருங்காட்சியகத்தில் நவாப்களின் ஆயுதங்கள் மற்றும் கவசங்கள் மற்றும் பல ஆர்வங்கள் மற்றும் கலைப்பொருட்கள் உள்ளன. கிர்னார் மலையில் சமண மற்றும் இந்து மதப்பிரிவுகளுக்கு சொந்தமான கோவில்கள் உள்ளன.
இந்த சிங்க கிராமத்திற்கு செல்ல உங்களுக்கும் ஆசையாக உள்ளதா?



Click it and Unblock the Notifications





