குலாப் பாக் அல்லது சஜ்ஜன் நிவாஸ் கார்டன் என்று அழைக்கப்படும் இந்த தோட்டப்பூங்கா 1850 களில் மஹாராணா சஜ்ஜன் சிங் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. உதய்பூரிலுள்ள தோட்டப்பூங்காக்களிலேயே பெரியதான இது 0.40 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ளது.
இங்குள்ள விக்டோரியா ஹால் மியூசியத்தில் புராதன பொருட்கள், அபூர்வ அழகு பொருட்கள் மற்றும் வரலாற்றுகால ராஜவம்ச பொருட்கள் ஆகியன பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த தோட்டப்பூங்காவை ஒட்டியே ஒரு வனவிலங்கு காட்சிக்கூடமும் உள்ளது.இவைதவிர, இந்த வளாகத்தில் மஹாராணா ஃபதேஹ் சிங் அவர்களால் உருவாக்கப்பட்ட சரஸ்வதி பவன் எனும் நூலகமும் உள்ளது. இந்த நூலகத்தில் தொல்லியல், வரலாறு மற்றும் தத்துவம் போன்ற துறைகள் தொடர்புடைய அரிய நூல்கள் உள்ளன.
மேலும், வரலாற்று காலத்தைச் சேர்ந்த புராதனப் பிரதிகளும் இங்கு காக்கப்பட்டு வருவதை பயணிகள் காணலாம்.



Click it and Unblock the Notifications