சஜ்ஜன்கர் காட்டுயிர் சரணாலயம் உதய்பூரிலிருந்து 5கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது சஜ்ஜன்கர் அரண்மனையை சூழ்ந்து காணப்படுகிறது. இதன் பின்னணியில் எழும்பி நிற்கும் பன்ஸ்தாரா மலை வியக்கவைக்கும் அழகுடன் காட்சியளிக்கின்றது.
புலி ஏரி அல்லது ஜியான் ஏரி என்றும் அழைக்கப்படும் பாரி ஏரி இந்த சரணாலய வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த செயற்கை ஏரி 1664ம் ஆண்டு மேவார் மன்னர் மஹாராணா ராஜ் சிங் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அவர் இந்த ஏரிக்கு தன் தாயார் ஜன தேவியின் நினைவாக ஜியான் ஏரி என்று ஆதியில் பெயரிட்டுள்ளார்.இந்த சரணாலயத்தில் பலவிதமான விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன ஜந்துக்கள் வசிக்கின்றன. காட்டுப்பன்றி, குள்ள நரி, சாம்பார் மான், நீல எருதுகள், கழுதைப்புலிகள், புள்ளி மான்கள், சிறுத்தைகள் மற்றும் முயல்களை இங்கு காணலாம்.இந்த சரணாலயத்துக்கு அருகிலேயே ‘மச்லா மக்ரா’ என்றழைக்கப்படும் மீன் வடிவத்தில் அமைந்த ஒரு மலை உள்ளது. இதன் அழகு மிகவும் ரசிக்கும்படி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு சிவன் கோயிலும் இந்த சரணாலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.