ஷில்ப்கிராம் எனப்படும் கைவினைப்பொருள் கிராமம் உதய்பூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது பாரம்பரிய பாணியில் கட்டப்பட்ட 26 குடிசை வீடுகளைக்கொண்ட ஒரு குக்கிராமமாகும். இங்குள்ள குடில்களில் ஒவ்வொன்றிலும் அன்றாட வாழ்க்கைக்குரிய பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
இவற்றில் ஐந்து குடில்களில் மேவார் நெசவாளர் சமூகத்தினரின் வாழ்வியல் அம்சங்களை பிரதிபலிக்கின்றன. இந்த ஷில்ப்கிராம் ஒரு வாழும் இனப்பண்பாட்டு அருங்காட்சியகம் என்றே சொல்லலாம். இது மேற்குப்பிரதேச பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை கண் முன் நிறுத்துகிறது.ஒவ்வொரு வருடமும் இந்த ஷில்ப்கிராம் பலவிதமான மேடை நாடக நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறது. அதில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
நாட்டுப்புற கலை கைவினைப்பொருள் மையத்தின் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட திறந்தவெளி அரங்கம் இங்கு உள்ளது. ஷில்ப் தர்ஷன் எனும் வருடாந்திர கலைச்சந்தையின் போது நாடெங்கிலிருந்தும் வரும் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை இங்கு ரசிகர்களுக்கு காட்சிக்கு வைத்து விற்பனையும் செய்கின்றனர்.