924 அடி நீளமுடைய இந்த வர்கலா நீர்வழி சுரங்கப்பாதை திருவாங்கூர் திவான் டி.மஹாதேவராவ் என்பவரால் 1867ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இதை கட்டி முடிப்பதற்கு 14 ஆண்டுகள் ஆயின.
முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ள இந்த சுரங்கப்பாதை அட்டிங்கல் அரண்மனைக்காக கட்டப்பட்டுள்ளது. உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்துக்கான நோக்கத்துடன் இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டிருக்கிறது. அக்காலத்திய கட்டுமான தொழில்நுட்பத்தின் சாட்சியாக விளங்குவதால் இந்த சுரங்கப்பாதையானது சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்க்கிறது.
கடந்த போன மூதாதையரின் கட்டுமானத்திறனை கண்டு வியப்பதற்கு மறக்காமல் இந்த வர்கலா நீர்வழி சுரங்கப்பாதைக்கு விஜயம் செய்யுங்கள். வர்கலா கலங்கரை விளக்கத்துக்கு அருகிலேயே இந்த சுரங்கப்பாதை உள்ளது.



Click it and Unblock the Notifications