ஃபோய் சாஹர் ஏரி எனும் இந்த செயற்கை ஏரி ஆங்கிலேய கட்டிடக்கலை நிபுணரான ஃபோய் என்பவரின் நேரடி மேற்பார்வையில் 1892ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பஞ்ச நிவாரணத்திட்டமாக நிறைவேற்றப்பட்ட இந்த ஏரி ஒரு முக்கியமான நீர் ஆதாரமாக திகழ்ந்துள்ளது.
இந்த ஏரியை முதன்முறை பார்க்கும் பயணிகள் இதன் அழகில் மெய்மறக்கும் அளவுக்கு இந்த ஏரி எழிலுடன் காட்சியளிக்கிறது. ஒரு ரொட்டியைப்போன்று தட்டையான தோற்றத்தை கொண்டுள்ள இது சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பெரிதும் விரும்பும் சிற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.