கேரள மாநிலத்தில் பிரசித்தமாக அதிக பக்தர்களால் பூஜித்து வணங்கப்படும் கோயில்களில் இந்த செட்டிக்குளங்கரா பகவதி கோயிலும் ஒன்றாகும். சபரிமலைக்கு அடுத்ததாகவே சொல்லும் அளவுக்கு இங்கு பக்தர்கள் ஏராளமாக வருகை தருகின்றனர்.
1200 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த கோயிலில் வீற்றுள்ள அம்மனுக்கு ஒரு சிறப்பம்சமும் உண்டு. அதாவது, ஒரு நாளில் மூன்று அவதார வடிவங்களாக இந்த கோயில் தெய்வம் காட்சியளிக்கிறது.
காலை நேரத்தில் மஹா சரஸ்வதியாகவும், நடுப்பகலில் மஹாலட்சுமியாகவும், மாலைநேரத்தில் துர்க்கா தேவியாகவும் இந்த பகவதி அம்மன் காட்சி தருவது வேறெங்குமே காணமுடியாத விசேஷமாகும்.
இந்த பகவதி அம்மனின் மகிமை பற்றியும், கோயிலில் உள்ள மற்ற சிறு தெய்வங்களின் அருள் குறித்தும் ஏராளமான புராண ஐதீகக்கதைகள் பக்தர்களால் சொல்லப்படுகின்றன. வண்ணமயமான பல திருவிழாக்கள் இக்கோயிலில் இசை, நடனம் போன்ற உள்ளூர் கலையம்சங்களுடன் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.



Click it and Unblock the Notifications