செயிண்ட் ஜார்ஜ் கத்தோலிக் சர்ச் அல்லது ‘எடுத்துவா பள்ளி’ என்று அழைக்கப்படும் இந்த கிறிஸ்த்துவ தேவாலயமானது கிறிஸ்த்துவ ஆன்மீக யாத்ரீகர்கள் மத்தியில் பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது. பம்பா ஆற்றின் துணை ஆறு ஒன்றின் கரையில் அமைந்துள்ள இந்த தேவாலயம் அதன் இருப்பிட எழில் அம்சங்களுக்காகவும் கட்டிடக்கலை அம்சங்களுக்காகவும் புகழ் பெற்றுள்ளது.
இரண்டு நூற்றாண்டுகள் பழமையை உடைய இந்த தேவாலயம் வரலாற்றுகால ஐரோப்பிய பாணி தேவாலயங்களைப் போன்றே கட்டப்பட்டுள்ளது. இங்கு வருடா வருடம் கொண்டாடப்படும் ஆலயத்திருவிழாவில் கலந்துகொள்ள கேரளா மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்களும் பயணிகளும் வருகை தருகின்றனர்.
இந்த திருவிழா நிகழ்வை மையப்படுத்தி இந்த பிரதேசம் பொருளாதார ரீதியாகவும் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பத்து நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் இத்திருவிழா ஏப்ரல் 27ம் தேதி தொடங்கி மே மாதம் 7ம் தேதி வரை நீடிக்கிறது.
அச்சமயம் தெய்வீக அம்சத்துடன் காட்சியளிக்கும் ‘தங்கத்தால் ஆன செயிண்ட் ஜார்ஜ் சிலை’ ஆலயத்தின் கூடத்தில் பக்தர்களுக்கு அருள் வழங்குவதற்காக வைக்கப்படுகிறது. இந்த தேவாலயத்திற்கு செல்வதற்கு தனியார் டாக்சி வசதிகள் உள்ளன.



Click it and Unblock the Notifications