காயம்குளம் ஏரியானது இது அமைந்திருக்கும் காயம்குளம் எனும் இடத்தின் பெயராலேயே அறியப்படுகிறது. பண்டைய காலத்திலிருந்தே இது ஒரு புராதன கடல் வாணிப துறைமுகமாக பிரசித்தி பெற்றுள்ளது. ‘ஆலெப்பி’ உப்பங்கழியின் நீட்சியாகவும், புவியியல் ரீதியாக நீர்வழிப்போக்குவரத்துக்கு உகந்த இடத்திலும் இந்த காயம்குளம் பகுதி அமைந்துள்ளது.
வணிகத்துக்கும் போக்குவரத்துக்கும் பயன்படக்கூடிய ஒழுங்கான அமைப்பைக்கொண்ட ஓடையை இந்த காயம்குளம் ஏரி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஏரிப்பகுதியின் அழகை முழுமையாக ரசிக்க விரும்பினால், இங்கு பல்வேறு கட்டணங்கள் மற்றும் வசதிகளுடன் இயக்கப்படும் படகுவீடுகளில் தோதான ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் பயணம் செய்வது அவசியமான ஒன்றாகும்.
மரங்கள் அடர்ந்த கரைப்பகுதி, சலனமற்ற நீர்ப்பரப்பு, வானில் கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் போன்றவற்றை ரசித்தபடியே – இந்த படகு வீடுகளில் பரிமாறப்படும் கேரள உணவுப்பண்டங்களையும் ருசிக்கலாம்.
கேரள சுற்றுலா அம்சங்களிலேயே மிக உன்னதமான இந்த ‘படகுவீடு சுற்றுலா அனுபவம்’ என்பது வாழ்வில் ஒருமுறையாவது இந்திய சுற்றுலாப்பயணி அனுபவித்து ரசிக்க வேண்டிய அம்சமாகும்.