குருத்வாரா பாபா அடல் எனும் இந்த குருத்வாரா தங்கக்கோயிலுக்கு தெற்கே அம்ரித்ஸர் நகரின் மிக உயரமான கட்டமைப்பாக வீற்றிருக்கிறது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த குருத்வாரா ஆதியில் பாபா அடல் ராய் என்பவரது சமாதி ஸ்தலமாக இருந்து வந்திருக்கிறது.
இவர் குரு ஹர்கோபிந்த்ஜி அவர்களின் மகனாவார். 40 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த குருத்வாராவின் எண்முக வடிவ கோபுரத்தில் ஒன்பது அடுக்குகள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் 1628ம் ஆண்டு மரணமடைந்த பாபா அடல் ராய் அவர்களின் ஒன்பது வருட குறுகிய வாழ்க்கை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
இந்த குருத்வாராவின் தரைத்தளத்தில் நான்கு திசைகளிலும் நான்கு நுழைவாயில்கள் உள்ளன. பிரதான வாசல் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. குரு கிரந்த சாஹிப் நூல் ஒரு எண்முக பீட அமைப்பின்மீது வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த குருத்வாராவில் 24 மணி நேரமும் ‘லங்கார்’ எனப்படும் இலவச உணவு வழங்கப்படுகிறது. அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த குருத்வாரா அம்ரித்ஸர் நகரில் சுற்றுலா பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய ஒரு இடமாகும்.