குருத்வாரா பிபேக்சர் சாஹிப் என்று அழைக்கப்படும் இந்த சீக்கியக்கோயில் பிபேக்சர் எனப்படும் தீர்த்தக்குளத்தின் கரையில் அமைந்திருக்கிறது. இந்த தீர்த்தக்குளத்தை 6 வது சீக்கிய குருவான குரு ஹர்கோபிந்த் ஜி 1628ம் ஆண்டில் உருவாக்கியுள்ளார்.
பின்னர் அக்குளத்தை ஒட்டியே இந்த குருத்வாராவை மஹாராஜா ரஞ்சித்சிங் கட்டியுள்ளார். வேட்டைக்கு சென்று வந்த பின்பு குரு ஓய்வெடுக்கும் இடத்தில் இந்த குருத்வாரா கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது.
ரம்மியமான இயற்கைச்சூழலுக்கு நடுவே அமைந்துள்ள இந்த குருத்வாரா ஒரு அழகிய தோட்டத்தையும் உள்ளடக்கியுள்ளது. இந்த தோட்டத்தில் குரு ஹர்கோபிந்த் ஜி ஓய்வெடுக்கும் வழக்கத்தை கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
அவர் தனது குதிரையை கட்டி வைப்பதற்கு பயன்படுத்திய மரம் ஒன்று இன்றும் குருத்வாரா வளாகத்தில் உயிருடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஷிரோண்மணி பர்பந்தக் கமிட்டி எனும் அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படும் இந்த குருத்வாராவுக்கு மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் விஜயம் செய்யலாம்.