தீவிர சிவபக்தர்கள் பல்வேறு பிரிவுகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். அகராக்கள் என்ற பிரிவை சேர்ந்த தீவிர சிவபக்தர்கள் பாபா’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் வட இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகின்றனர். பரேலி நகரத்தில் நான்கு வகையான ‘அகரா’க்கள் வசிக்கின்றனர். ஆனந்த மார்க்கத்தை சேர்ந்த ‘நாக சாதுக்கள்’ இவர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.
இந்த நாக சாதுக்கள் தங்களின் தலைமை ஆன்மீகத்தலமாக பரேலியில் ஒரு வளாகத்தை கொண்டுள்ளனர். அந்த வளாகத்தில்தான் இந்த அலக்நாத் கோயில் அமைந்திருக்கிறது.
பிரதான கோயிலுக்கு அருகே சிறிய அளவிலான சில கோயில்களும் இந்த வளாகத்தில் காணப்படுகின்றன. இவை இதர முக்கிய தெய்வங்களுக்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கோயில்களை சுற்றியுள்ள பகுதிகளில் நாக சாதுக்கள் அல்லது பாபாக்கள் வசிக்கின்றனர்.
தினமும் ஏராளமான பக்தர்கள் இந்த அலக்நாத் கோயிலுக்கு வருகை தருகின்றனர். இந்த கோயில் வளாகத்தின் ஒரு பகுதியில் ஆடுகள் மற்றும் பசுக்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு ஒட்டகத்தையும் இங்கு காணலாம்.
இந்த நாக சாதுக்கள் அல்லது பாபாக்கள் பக்தர்களிடமிருந்து காணிக்கைகளை பெற்றுக்கொண்டு பதிலுக்கு திருநீறு வழங்கி ஆசி அளிக்கின்றனர்.