பத்ராச்சலம் நகரின் முக்கியமான ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ சீதா ராமச்சந்திர சுவாமி கோயில் புராணச் சிறப்பு வாய்ந்த பர்ணசாலா கிராமத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி மற்றும் சீதா தேவி இருவருக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சீதாவை காப்பாற்ற இலங்கை சென்ற போது கோதாவரி நதியை கடந்து சென்ற இடத்தில்தான் இந்தக் கோயில் கட்டப்பட்டிருப்பதாக புராணம் கூறுகிறது. இதேபோல் இந்தக் கோயிலை பற்றி மற்றொரு சுவையான புராணச் செய்தியும் உள்ளது.
அதாவது கபீர் என்ற இஸ்லாமியர் ஒருவருக்கு இந்தக் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கோயிலில் இருந்த சிலைகள் எல்லாம் திடீரென மாயமானது.
அதன் பிறகு கபீர் கோயிலுக்குள் நுழைந்த பிறகுதான் சிலைகள் யாவும் திரும்பவும் தோன்றியதாக கூறப்படுகிறது. இவைபோன்ற எண்ணற்ற புராணச் செய்திகளின் பின்புலத்தில் ஸ்ரீ சீதா ராமச்சந்திர சுவாமி கோயில் பக்தர்கள் மற்றும் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது.