மிசோ கவிஞர் சதுக்கம் என்றழைக்கப்படும் இந்த கட்டிடம் மிசோ இன கவிஞர்களை போற்றும் வண்ணம் உருவாக்கப்பட்டது. வங்காளத்தின் சிட்டகாங்கில் இருந்து 100கிமீ தொலைவில் இக்கட்டிடம் உள்ளது.
காவ்பங் கிராம மக்களால் 1983ல் கட்டப்பட்ட இந்த சின்னம், படியா, தம்ஹூவா ஆகிய கவிஞர்களுக்காக எழுப்பப்பட்டது. காலப்போக்கில் மிசோ இலக்கியத்தில் பங்களிப்பைச் செய்த அனைத்து கவிஞர்களின் பெயரையும் இதில் சேர்க்கத் துவங்கினார்கள். சம்பையில் இருந்து சுற்றுலா பேருந்து மூலம் இலக்கை அடையலாம்.