கன்சால் கிராமத்திலிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ள இந்த நேப்லி எனும் வனப்பகுதி சண்டிகரின் வடக்கு எல்லையில் வீற்றிருக்கிறது. 3245 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த வனப்பகுதி ஹரியானா மாநிலத்திடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
கழுதைப்புலி, கலைமான், நில்கை மான், நரி மற்றும் முயல் போன்ற விலங்குகளை இந்த காட்டுப்பகுதியில் பார்க்கலாம். எனினும் இந்த பாதுகாப்பு வனச்சரகத்துக்குள் நுழைய சண்டிகர் வனப்பாதுகாப்பு அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டியுள்ளது.
8 கி.மீ நீளமுள்ள ஒரு செங்குத்தான மலையேற்றப்பாதை இந்த வனப்பகுதியின் சிறப்பம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. இது நேப்லி வனப்பகுதியிலுள்ள ஓய்வு இல்லத்தையும் கன்சால் வனப்பகுதியிலுள்ள ஓய்வு இல்லத்தையும் இணைக்கிறது.



Click it and Unblock the Notifications