சண்டிகர் நகரத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் மொஹாலி மாவட்டத்தில் சண்டிகர் – ஜிராக்பூர் – பாடியாலா சாலையில் இந்த சாத்பீர் வனவிலங்கு காட்சியகம் அமைந்துள்ளது.
1977ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி துவங்கப்பட்ட இந்த வனவிலங்கு காட்சியகம் ஆரம்ப காலத்தில் மஹேந்திர சௌதரி ஜுவாலஜிகல் பார்க் என்ற அழைக்கப்பட்டது. 202 ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ள இந்த வனவிலங்கு காட்சியகம் வடஇந்தியாவிலேயே அளவில் பெரியதாக சொல்லப்படுகிறது.
இயற்கையான வனப்பகுதியை ஒட்டியே அமைக்கப்பட்டிருக்கும் வனவிலங்கு காட்சியகத்தில் 85 வகையான பாலூட்டி விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன விலங்குகள் பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன.
950 உயிரினங்களை கொண்டுள்ள இந்த சாத்பீர் வனவிலங்கு காட்சியகத்தின் முக்கிய அம்சம் இங்குள்ள ராயல் பெங்கால் புலி ஆகும். இந்த வளாகத்தின் உள்ளே லயன் சஃபாரி, டிரைவ்-இன் டீர் சஃபாரி மற்றும் ஷாலோ லேக் போன்றவை முக்கியமான அம்சங்களாக பார்வையாளர்களால் விரும்பப்படுகின்றன.
பல அபூர்வ வகை மரங்கள், மூலிகைத்தாவரங்கள் போன்றனவும் இந்த வளாகத்தில் காணப்படுவதால் இயற்கையான காட்டுச்சூழலில் வன விலங்குகளை பார்ப்பது போன்ற அனுபவத்தை இது பார்வையாளர்களுக்கு அளிக்கிறது.
திங்கள் கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை இந்த சாத்பீர் வனவிலங்கு காட்சியகம் திறந்துள்ளது.