சிரபுஞ்சியின் சுற்றப்புறத்தில் சென்று பார்த்து வரக்கூடிய மிகச் சில அழகிய பூங்காக்களுள் ஈகோ பூங்காவும் ஒன்றாகும். மேகாலயா அரசால் உருவாக்கப்பட்டுள்ள இது, சுற்றிலும் உள்ள அழகிய பச்சை மலைகளையும், சோஹ்ராவின் பள்ளத்தாக்குகளையும், அவற்றிலிருந்து உருவாகும் நீர்வீழ்ச்சிகளையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கும் வண்ணம், உயரமான மேட்டு நிலங்களுள் ஒன்றின் மீது அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பூங்காவில் பல்வகை ஆர்க்கிட்களையும் காண முடிகிறது. இதற்கான பெருமை ஷில்லாங் அக்ரி-ஹார்டிகல்ச்சுரல் சொஸைட்டியையே சேரும்.
ஈகோ பூங்காவின் விளிம்பிலிருந்து நம் பார்வைக்குக் கிடைக்கும் இயற்கை அழகு, நம் கண்களை நிறைத்து நம்மை ஆனந்தத்தில் உறைய வைக்கக்கூடியதாகும். இந்த இடம், அருகாமையில் உள்ள வங்கதேசத்தின் சைலெட் சமவெளிகளைப் பார்ப்பதற்கு உகந்த நோக்குமுனையாகவும் திகழ்கிறது.
ஆனால், வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நாளில், வெளிச்சம் குறைவாக இருக்கும் காரணத்தினால் இப்பூங்கா வழங்கக்கூடிய கண்கவர் காட்சியை பூரணமாகக் கண்டு களிப்பது என்பது சற்று கடினமே.
இந்த ஈகோ பூங்காவை சென்று அடைய மிகத் தோதான ஒரு வழி, ஷில்லாங்கிலிருந்து மேகாலயா சுற்றுலாத் துறையால் இயக்கப்படும் ஒரு கார் அல்லது பேருந்து மூலம் பயணம் மேற்கொள்வதேயாகும்



Click it and Unblock the Notifications