சிக்மகளூர் செல்லும் பயணிகள் இந்நகரத்திலிருந்து 20 கி.மீ தள்ளியுள்ள அய்யனகேரே ஏரிக்கு விஜயம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மலநாடு பகுதியில் அழகான இயற்கைச்சூழலுக்கு மத்தியில் அமைதியுடன் காணப்படும் இந்த ஏரி கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய ஏரியாகும். 12ம் நூற்றாண்டில் இந்த பகுதியின் விவசாய வளத்தை பெருக்குவதற்காக இந்த ஏரி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஏரிக்கு அருகில் காணப்படும் பிரமிடு வடிவத்தில் உள்ள மலை சுற்றுலாப்பயணிகளை மிகவும் கவரும் அம்சமாகும். இந்த ஏரிப்பகுதியிலிருந்து பார்த்தால் சூரிய உதயமும் அஸ்தமனமும் மனதைக்கவரும் அனுபவத்தை தருகின்றன.
இந்த ஏரிப்பகுதி சுற்றுலாப்பயணிகளுக்கு கூடாரத்தங்கல், மீன்பிடித்தல் போன்ற சிற்றுலா(பிக்னிக்) பொழுதுபோக்குக்கான வசதிகளை வழங்குகிறது. பயணிகள் ஏரிக்கு அருகிலுள்ள சகுனி ரங்கநாதா கோயிலையும் சென்று பார்க்கலாம்.
அய்யனகேரே இப்பகுதி மக்களின் விவசாய தேவைகளுக்கான நீரை வழங்கும் ஏரியாக இருந்து வருகிறது. 21,560 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கான நீரை இது அளிப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.