பத்ரா வனவிலங்கு சரணாலயத்தில் பிரசித்தி பெற்ற பகுதியாக இந்த முகாம் விளங்குகிறது. இந்த ஸ்தலம் சிக்மகளூரிலிருந்து 32 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது தவிர தணிகேபைலு, லக்கவள்ளி, ஹெப்பீ போன்ற முகாம்களும் பத்ரா வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளன.
இந்த முத்தோடி வனத்துறை முகாமில் நுழைந்த உடனேயே நம்மால் பல விலங்குகளை பார்க்க முடியும். குறிப்பாக புலிகள், சாம்பார் மான்கள், யானைகள் , புள்ளி மான்கள் காட்டெருமைகள் போன்றவை இவற்றில் சில. பலவகையான பறவை வகைகளையும் இங்கு பார்க்க முடிகிறது.
சுற்றுலா பயணிகளுக்காகவே நேச்சர் கேம்ப் எனும் பிரத்யேக முகாம்கள் இங்கு வனத்துறையினரால் நடத்தப்படுகின்றன. கூடாரங்கள் மரக்குடில்கள் போன்ற தங்குமிட வசதிகளும் இங்கு பயணிகளின் இரவுத்தங்கலுக்காக உருவாக்கப்பட்டுள்ளன.