பீஹார் மாநிலத்தில் இருக்கும் தர்பாங்கா மிக அருமையான சுற்றுலாதளமாக விளங்குகிறது. வட பீஹாரின் முக்கிய நகரான இது மிதிலான்சலின் மையப்பகுதியில், நேபாளத்திலிருந்து 50கிமீ தொலைவில் உள்ளது. பீஹாரின் கலாச்சார தலைநகராகக் கருதப்படும் இவ்வூர் இசை, நாடோடிக் கலைகள் ஆகியற்றில் சிறந்து விளங்குகிறது. மேலும் இங்குள்ள கட்டிடக்கலையும் சிறப்புமிக்கதாக போற்றப்படுகிறது.
மிதிலா ஓவியங்களுக்காக புகழ்பெற்றுள்ள இவ்வூரில் நெளடாங்கி, நட்டுவா நச், சமா சகேவா, மதுஸ்ரவானி ஆகியபாரம்பரிய நடனம் ஆடப்படுகின்றன. கார்த்திக் பூர்ணிமா மேளா, தசரா மேளா, ஜன்மாஷ்டமி மேளா, தீபாவளி மேளா போன்ற ஏராளமான விழாக்கள் இங்கு நடத்தப்படுகின்றன.
தர்பாங்க என்ற பெயர், த்வார்-பங்கா என்ற இரு வார்த்தைகளையும் சேர்த்து வருவதாகும். இதில் த்வார் என்றால் வாயில் எனவும், பங்கா என்றால் வங்காளம் என்றும் பொருள்.
கங்கை நதிக்கும் இமயமலைகளுக்கும் நடுவே உள்ள இந்நகரம் பழங்காலத்தில் மிதிலா என்றழைக்கப்பட்டது. இவ்வூர் மாம்பழத்திற்காகவும், பிற பழங்களுக்காகவும் புகழ்பெற்று விளங்குகிறது.
தர்பங்கா அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
தர்பங்கா கோட்டை, ஷ்யாமா காளி கோவில், மஜர் மக்தூம் பாபா, புனித ரோசரி தேவாலயம், சந்த்ரதாரி அருங்காட்சியகம், ஹராஹி குளம் ஆகியவை முக்கியமான சுற்றுலா தளங்களாக விளங்குகின்றன.
மிதிலா ஓவியங்களுக்காக புகழ்பெற்றுள்ள இவ்வூரில் நெளடாங்கி, நட்டுவா நச், சமா சகேவா, மதுஸ்ரவானி ஆகியபாரம்பரிய நடனம் ஆடப்படுகின்றன. கார்த்திக் பூர்ணிமா மேளா, தசரா மேளா, ஜன்மாஷ்டமி மேளா, தீபாவளி மேளா போன்ற ஏராளமான விழாக்கள் இங்கு நடத்தப்படுகின்றன.



Click it and Unblock the Notifications