பீஹாரின் இரண்டாவது பெரிய மக்கள்தொகை கொண்ட மாவட்டமாக கிழக்கு சம்பரான் திகழ்கிறது. சம்பா, ஆரன்யா என்ற பெயர்களில் இருந்து உருவான சம்பரான் என்ற பெயரின் பொருள் வாசனைமலர் மரங்கள் உள்ள இடம் என்று பொருள். ஒருகாலத்தில் மக்னோலியா மரங்களால் இவ்விடம் சூழப்பட்டிருந்த போது இப்பெயர் பெற்றது.
பிஹாரின் நிர்வாக மாவட்டமாக உள்ள இவ்விடம் பச்சைப்பசேலென்ற புல்வெளிகளால் சூழப்பட்டுள்ளது. கண்டக், புர்ஹி கண்டக், பாக்மதி போன்ற நதிகள் இவ்வழியாக ஓடுகின்றன. நேபாளத்துடன் எல்லையைப் பகிரும் இந்த நகரில் இருந்து பீஹாரின் மற்ற நகரங்களுக்கு போக்குவரத்து வசதிகள் மிகுதியாக உண்டு.
கிழக்கு சம்பரான் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
மோடிஹரி இம்மாவட்டத்தில் தலைமைசெயலகமாக கருதப்படுகிறது. வரலாற்றுப் புகழ்மிக்க பல புரட்சிகள் இங்கு நடந்துள்ளன. காந்தியின் சத்யாகிரகம் இங்குதான் துவக்கப்பட்டது.
மேலும் சேசரியா ஸ்டூபா, ரக்சுவல் மற்றும் சோமேஷ்வர மந்திர் ஆகிய தளங்களும் இங்கு உள்ளன. இவையெல்லாம் இம்மாவட்டத்தை முக்கியமான சுற்றுலா தளமாக ஆக்கியுள்ளன.
கலை மற்றும் கலாச்சாரம்!
நாடோடிப்பாடல்களுக்கு புகழ்பெற்ற தளமாக இவ்விடம் திகழ்கிறது. திருமணமான பெண்களால் ஆடப்படும் ஜுமேரி நடனம் பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. பலவகையான உணவுவகைகளும் இங்கு கிடைக்கின்றன. நாவூரும் சென்னா முர்கி, கெசரியா பேடா, காஜா, மால் புவா, குர்மா, தெகுவா, டில்குட், முரபாதத் ஆகியவை இங்கு செய்யப்படுகின்றன,
சூரிய பகவானுக்காக கொண்டாடப்படும் சட் பூஜா, சித்திரை மாதத்திலும், கார்திகை மாதத்திலும் கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி, ஹோலி, ராமநவமி சமயங்களில் இங்கு பயணிப்பது சிறந்தது.
பயணிக்க சிறந்த பருவம்
அக்டோபர் முதல் மார்ச் வரையிலான குளிர்காலத்தில் மிதமான வானிலை நிலவுவதால் அப்போது பயணிப்பதே சிறந்தது.
கிழக்கு சம்பரானை அடையும் வழிகள்
ரயில் மற்ற்உம் சாலை வசதிகள் இங்கு சிறப்பாக உள்ளன.



Click it and Unblock the Notifications