கடக்’கிலிருந்து 26 கி.மீ தூரத்தில் மகடி குளம் அல்லது மகடி கேரே (ஏரி) என்று அறியப்படும் ஏரியில் அமைந்துள்ள இந்த பறவைகள் சரணாலயத்துக்கு பயணிகள் விஜயம் செய்யலாம். 134 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் இந்த ஏரி 900 ஹெக்டேர் நீர்பிடிப்பு பகுதியை கொண்டுள்ளது.
இந்த ஏரியை ஒட்டி காவேரியின் துணை ஆறு ஒன்று ஓடுகிறது. இங்கு பயணிகள் பலவகையான அழகிய பறவைகளை பார்க்க முடியும். நீர் வாழ் உயிரினங்களுக்கு பதிலாக தாவர வகைகளை மட்டுமே உண்ணும் பட்டைத்தலை வாத்து என்னும் புலம் பெயர் பறவையை இங்கு பார்க்கலாம்.
கடந்த 10 ஆண்டுகளாக பல மத்திய ஆசிய புலம் பெயர் பறவைகளையும் மற்றும் 134 வகை பறவைகளையும் இங்கு பார்க்க முடிகிறது. செந்நாரை, சாம்பல் நாரை, அரிவாள் மூக்கன் (ஒருவகை கொக்கு), சீப்பு மூக்கு வாத்து மற்றும் ஃபிளமிங்கோ நாரை போன்ற பறவை இனங்கள் இங்கு காணப்படுகின்றன.
வெள்ளை நீர்க்கோழி, கருப்பு நாரை, மஞ்சள் மூக்கு நாரை, செங்கால் நாரை, நீர் வாத்து மற்றும் கரண்டி வாயன் போன்ற அற்புதமான பறவைகளை இந்த சரணாலயத்தில் பார்க்கலாம். தற்சமயம்.இந்த சரணாலயம் கர்நாடக மீன் வளர்ப்புத்துறை மற்றும் மகடி உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகத்தின் கீழ் உள்ளது.



Click it and Unblock the Notifications